search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருபுவனம் வீரமாகாளியம்மன் திருநடன உற்சவ விழா தொடக்கம்
    X
    திருபுவனம் வீரமாகாளியம்மன் திருநடன உற்சவ விழா தொடக்கம்

    திருபுவனம் வீரமாகாளியம்மன் திருநடன உற்சவ விழா தொடக்கம்

    கும்பகோணம் அருகே திருபுவனம் தெற்கு வீதியில் உள்ள வீரமாகாளியம்மன் கோவிலில் திருநடன உற்சவ விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி நாளை (செவ்வாய்க்கிழமை) பால்குடம் ஊர்வலம் நடக்கிறது.
    கும்பகோணம் அருகே திருபுவனம் தெற்கு வீதியில் உள்ள வீரமாகாளியம்மன் கோவிலில் 125-ம் ஆண்டு திருநடன உற்சவ விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி கஞ்சி வார்த்தல், சக்தி கரக வீதி உலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவில் நாளை (செவ்வாய்க்கிழமை) பால்குடம் ஊர்வலம் நடக்கிறது.

    அதைத்தொடர்ந்து கோடை அபிஷேகம், சந்தனக்காப்பு அலங்காரம் நடக்கிறது. 10-ந் தேதி (புதன்கிழமை) வீரமாகாளியம்மன் புறப்பாடு நடைபெறுகிறது. 14-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மந்திர பச்சை காளியம்மன் புறப்பட்டு தங்கை வீரமாகாளியம்மனை அழைக்கும் காட்சி நடக்கிறது.
    Next Story
    ×