search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருக்கண்ணபுரம் சவுரிராஜப்பெருமாள் கோவிலில் தெப்ப உற்சவம் நடந்த போது எடுத்த படம்.
    X
    திருக்கண்ணபுரம் சவுரிராஜப்பெருமாள் கோவிலில் தெப்ப உற்சவம் நடந்த போது எடுத்த படம்.

    திருக்கண்ணபுரம் சவுரிராஜப்பெருமாள் கோவிலில் தெப்ப உற்சவம்

    திருமருகல் அருகே உள்ள திருக்கண்ணபுரம் சவுரிராஜப்பெருமாள் கோவிலில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில் சவுரிராஜப்பெருமாள் கோவில் அமைந்துள்ளது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மக பெருவிழா 15 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு மாசிமக பெருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.விழாவையொட்டி தங்க பல்லாக்கு திருமேனி சேவை, தங்க கருட சேவை மற்றும் பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடைபெற்றது.

    தொடர்ந்து தேரோட்டம், திருப்பட்டினம் கடற்கரையில் சமுத்திர தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடந்தன.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம், நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. முன்னதாக காலை பெருமாள் திருமஞ்சனம் நடைபெற்றது.

    பின்னர் நாச்சியார்களுடன், சவுரிராஜப்பெருமாள், தெப்பத்தில் எழுந்தருளினார்.கோவிலின் எதிரே அமைந்துள்ள நித்திய புஷ்பகரணி குளத்தில் மூன்று முறை தெப்பம் வலம் வந்தது.

    தெப்பத்தில் பக்தி பாடல் இன்னிசை நிகழ்ச்சி மற்றும் நாதஸ்வர இன்னிசையும் நடைபெற்றது. இதில் மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினரும், திருமருகல் ஒன்றியக்குழு தலைவருமான ராதாகிருட்டிணன், தக்கார் அமரநாதன், செயல் அலுவலர் ராஜா, முன்னாள் அறங்காவலர் குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    Next Story
    ×