என் மலர்
ஆன்மிகம்

காங்கேயநல்லூர் முருகன் கோவிலில் லட்ச தீப திருவிழா
காங்கேயநல்லூர் முருகன் கோவிலில் லட்ச தீப திருவிழா
கோவிலில் லட்ச தீப திருவிழாவை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோவில் பிரகாரத்தில் அகல் விளக்கு தீபமேற்றி முருகனை வழிபட்டனர்.
காட்பாடி காங்கேயநல்லூர் திருமுருக கிருபானந்த வாரியார் அவதரித்த இடமாகும். இங்கு மிகவும் பழமை வாய்ந்த சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் லட்ச தீப திருவிழா நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோவில் பிரகாரத்தில் அகல் விளக்கு தீபமேற்றி முருகனை வழிபட்டனர்.
இரவு 7 மணிக்கு வாத ஊரானின் செஞ்சொல் விரிவுரை நிகழ்ச்சியும், இரவு 8 மணிக்கு பின்னணி பாடகர்கள் செந்தில் கணேஷ், ராஜலட்சுமி குழுவினரின் இன்னிசை கச்சேரியும், இரவு 11 மணிக்கு முருகப்பெருமான் வீதி உலா நிகழ்ச்சியும் நடந்தது.
லட்ச தீப திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை வழிபட்டனர். விருதம்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இரவு 7 மணிக்கு வாத ஊரானின் செஞ்சொல் விரிவுரை நிகழ்ச்சியும், இரவு 8 மணிக்கு பின்னணி பாடகர்கள் செந்தில் கணேஷ், ராஜலட்சுமி குழுவினரின் இன்னிசை கச்சேரியும், இரவு 11 மணிக்கு முருகப்பெருமான் வீதி உலா நிகழ்ச்சியும் நடந்தது.
லட்ச தீப திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை வழிபட்டனர். விருதம்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
Next Story