search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வருஷாபிஷேக விழாவையொட்டி கலச பூஜை நடந்த போது எடுத்த படம்.
    X
    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வருஷாபிஷேக விழாவையொட்டி கலச பூஜை நடந்த போது எடுத்த படம்.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் வருஷாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வருஷாபிஷேக விழாநடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் கடந்த 2013-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகம் நடந்த நட்சத்திர கணக்குப்படி 8-வது ஆண்டு வருஷாபிஷேக விழா நேற்று நடந்தது.

    நேற்று அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜை, விஸ்வரூப தரிசனம் நடந்தது. பின்னர் 5 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகமும், காலை 6 மணிக்கு தீபாராதனையும், ஸ்ரீபலிபூஜையும் நடந்தது. காலை 9 மணிக்கு கலசபூஜையும், 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. இதனை கோவில் மேல்சாந்திகள் மற்றும் கீழ் சாந்திகள் நடத்தினார்கள்.

    தொடர்ந்து அம்மனுக்கு மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வழங்கிய ரூ.1 கோடி மதிப்புள்ள வைரக் கிரீடம், வைரக்கல் மூக்குத்தி மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடந்தது. 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனை, ஸ்ரீபலி பூஜை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு அருட்பிரசாதம் வழங்கப்பட்டது.

    மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், இரவு 8 மணிக்கு தீபாராதனையும், பின்னர் அம்மன் வெள்ளி பல்லக்கில் எழுந்தருளி மேளதாளம் முழங்க கோவிலின் உள்பிரகாரத்தை சுற்றி 3 முறை வலம்வரும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு, அத்தாழ பூஜை, ஏகாந்த தீபாராதனை போன்றவை நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
    Next Story
    ×