search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் அகோரமூர்த்தி சம்கார உற்சவம்
    X
    சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் அகோரமூர்த்தி சம்கார உற்சவம்

    இந்திர திருவிழாவையொட்டி சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் அகோரமூர்த்தி சம்கார உற்சவம்

    திருவெண்காட்டில் உள்ள சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் இந்திர திருவிழாவை முன்னிட்டு மேளதாளம் முழங்கிட மருத்துவாசுரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.
    திருவெண்காட்டில் உள்ள சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் இந்திர திருவிழா கடந்த 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மருத்துவாசுரனை அகோர மூர்த்தி சம்ஹாரம் செய்யும் உற்சவம் நேற்று முன்தினம் நள்ளிரவு நடந்தது.

    இதனையொட்டி அகோரமூர்த்தி கோவிலில் உள்ள கொன்றை மரத்தடியில் எழுந்தருளினார். அப்போது மரத்தடியில் மருத்துவாசுரனை சம்காரம் செய்யும் ஐதீக நிகழ்ச்சி நடந்தது. அப்போது ஏராளமான பக்தர்கள் சாமிக்கு பட்டு வஸ்திரம் சாத்தி வழிபாடு செய்தனர்.

    மேளதாளம் முழங்கிட மருத்துவாசுரனை சம்காரம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி முருகன், மேலாளர் சிவக்குமார் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.
    Next Story
    ×