search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    விருத்தகிரீஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவம் நடைபெற்றபோது எடுத்த படம்.
    X
    விருத்தகிரீஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவம் நடைபெற்றபோது எடுத்த படம்.

    விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவ திருவிழா

    விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவ திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மக பெருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான விழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது.

    விழாவில் கடந்த 22-ந்தேதி கோவிலை கட்டிய விபசித்து முனிவருக்கு விருத்தகிரீஸ்வரர் காட்சியளித்தல் என்ற ஐதீக திருவிழாவும், 25-ந்தேதி தேரோட்டமும், 26-ந் தேதி மாசி மக உற்சவமும் நடந்தது. நேற்று முன்தினம் இரவு தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி விநாயகர், சுப்பிரமணியர், விருத்தகிரீஸ்வரர், விருத்தாம்பிகை, சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகளுக்கு பால், தயிர், இளநீர், தேன், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய, பஞ்சமூர்த்திகள் கோவிலை வலம் வந்தனர்.

    இதைத்தொடர்ந்து வள்ளி, தெய்வானை உடனுறை சுப்பிரமணியர் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் கோவில் தெப்பக்குளத்தில் எழுந்தருளினர். இதையடுத்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு, தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதில் விருத்தாசலம் பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து நேற்று சண்டிகேஸ்வரர் உற்சவம் நடந்தது. விழாவில் இன்று(திங்கட்கிழமை) முதல் 10-ந்தேதி வரை விடையாற்றி உற்சவம் நடக்கிறது.
    Next Story
    ×