என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
வால்பாறையில் காமாட்சியம்மன் கோவில் திருவிழா தொடங்கியது
Byமாலை மலர்21 Feb 2021 7:36 AM GMT (Updated: 21 Feb 2021 7:36 AM GMT)
வால்பாறையில் காமாட்சியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
வால்பாறை வாழைத்தோட்டம் பகுதியில் அன்னை ஶ்ரீ காமாட்சியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் 53-ம் ஆண்டு விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் நெய்வேத்திய பூஜை நடைபெற்றது. இதனை தொடர்ந்து கொடிமரத்திற்கான சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பின்னர் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.
திருவிழாவை முன்னிட்டு வருகிற 26-ந் தேதி கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் நடத்தப்பட்டு பல்வேறு கோவில்களில் இருந்து தீர்த்தங்கள் கொண்டு வந்து காமாட்சி அம்மனுக்கு அபிஷேக பூஜைகள் நடத்தப்படுகிறது.
27-ந் தேதி கணபதி ஹோமம், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு காமாட்சி அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு நடைபெறுகிறது.
பின்னர் வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இருந்து சீர்வரிசைகளுடன் ஏகாம்பர ஈஸ்வரர் மாப்பிள்ளை அழைத்து வந்து ஸ்ரீ அன்னை காமாட்சி அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.
இதனை தொடர்ந்து கோவில் வளாகத்தில் சிறப்பு அன்னதானம் நடைபெறுகிறது. மாலை 4 மணிக்கு மாவிளக்கு எடுத்து வால்பாறையின் முக்கிய வீதிகள் வழியாக அன்னை ஶ்ரீகாமாட்சியம்மன் திருவீதி உலா நடைபெறுகிறது. இரவு 10 மணிக்கு மகா அபிஷேகம் மற்றும் திருமஞ்சனம் நடக்கிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், விழாகமிட்டியினர் மற்றும் விழா ஒருங்கிணைப்பாளர்கள் செய்து வருகின்றனர்.
திருவிழாவை முன்னிட்டு வருகிற 26-ந் தேதி கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் நடத்தப்பட்டு பல்வேறு கோவில்களில் இருந்து தீர்த்தங்கள் கொண்டு வந்து காமாட்சி அம்மனுக்கு அபிஷேக பூஜைகள் நடத்தப்படுகிறது.
27-ந் தேதி கணபதி ஹோமம், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு காமாட்சி அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு நடைபெறுகிறது.
பின்னர் வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இருந்து சீர்வரிசைகளுடன் ஏகாம்பர ஈஸ்வரர் மாப்பிள்ளை அழைத்து வந்து ஸ்ரீ அன்னை காமாட்சி அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.
இதனை தொடர்ந்து கோவில் வளாகத்தில் சிறப்பு அன்னதானம் நடைபெறுகிறது. மாலை 4 மணிக்கு மாவிளக்கு எடுத்து வால்பாறையின் முக்கிய வீதிகள் வழியாக அன்னை ஶ்ரீகாமாட்சியம்மன் திருவீதி உலா நடைபெறுகிறது. இரவு 10 மணிக்கு மகா அபிஷேகம் மற்றும் திருமஞ்சனம் நடக்கிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், விழாகமிட்டியினர் மற்றும் விழா ஒருங்கிணைப்பாளர்கள் செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X