என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவில் தெப்பத்திருவிழா தொடங்கியது
Byமாலை மலர்19 Feb 2021 6:00 AM GMT (Updated: 19 Feb 2021 6:00 AM GMT)
திருப்பத்தூர் அருகே திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவில் மாசி மக தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருப்பத்தூர் அருகே உள்ள திருக்கோஷ்டியூரில் சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்குட்பட்ட சவுமிய நாராயண பெருமாள் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசிமக தெப்ப திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இதையொட்டி இந்தாண்டு இந்த விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக சவுமியநாராயண பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியருடன் சிறப்பு அலங்காரத்தில் கோவில் கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார். இதைத்தொடர்ந்து காலை 10.40 மணிக்கு கோவில் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. தொடர்ந்து கொடி மரத்திற்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
விழாவையொட்டி தினந்தோறும் சவுமிய நாராயண பெருமாள் அனுமன் வாகனம், கருட சேவை, தங்க சேஷ வாகனம், தங்க குதிரை வாகனம், அன்ன வாகனம், வெண்ணை தாழி சேவை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
23-ந்தேதி அன்று ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றுதல் நிகழ்ச்சியும்,24-ந்தேதி அன்று மாலை தெப்பக்குளத்தில் முகூர்த்தக்கால் நடுதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.26-ந்தேதி அன்று பகல் 12 மணிக்கு தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சி நடக்கிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியாக 27-ந்தேதி அன்று காலை 10.50 மணி முதல் 11.58 மணிக்குள் பகல் தெப்ப திருவிழாவும்,, இரவு 9 மணிக்குள் மின்னொளியில் தெப்பம் கண்டருளல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. அன்றைய தினம் தமிழகம் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கூட்டம், கூட்டமாக வந்து கோவில் தெப்பக்குளத்தில் பல்வேறு வேண்டுதல்கள் நிறைவேற வேண்டி விளக்கேற்றி வழிபாடு செய்வது தனிச்சிறப்பாகும்.
மறுநாள் (28-ந்தேதி) அன்று காலை தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.
முன்னதாக சவுமியநாராயண பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியருடன் சிறப்பு அலங்காரத்தில் கோவில் கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார். இதைத்தொடர்ந்து காலை 10.40 மணிக்கு கோவில் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. தொடர்ந்து கொடி மரத்திற்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
விழாவையொட்டி தினந்தோறும் சவுமிய நாராயண பெருமாள் அனுமன் வாகனம், கருட சேவை, தங்க சேஷ வாகனம், தங்க குதிரை வாகனம், அன்ன வாகனம், வெண்ணை தாழி சேவை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
23-ந்தேதி அன்று ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றுதல் நிகழ்ச்சியும்,24-ந்தேதி அன்று மாலை தெப்பக்குளத்தில் முகூர்த்தக்கால் நடுதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.26-ந்தேதி அன்று பகல் 12 மணிக்கு தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சி நடக்கிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியாக 27-ந்தேதி அன்று காலை 10.50 மணி முதல் 11.58 மணிக்குள் பகல் தெப்ப திருவிழாவும்,, இரவு 9 மணிக்குள் மின்னொளியில் தெப்பம் கண்டருளல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. அன்றைய தினம் தமிழகம் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கூட்டம், கூட்டமாக வந்து கோவில் தெப்பக்குளத்தில் பல்வேறு வேண்டுதல்கள் நிறைவேற வேண்டி விளக்கேற்றி வழிபாடு செய்வது தனிச்சிறப்பாகும்.
மறுநாள் (28-ந்தேதி) அன்று காலை தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X