search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நித்யகல்யாணபெருமாள்
    X
    நித்யகல்யாணபெருமாள்

    காரைக்கால் கடற்கரையில் நித்யகல்யாணபெருமாளுக்கு சமுத்திர தீர்த்தவாரி

    காரைக்கால் கடற்கரையில் சமுத்திர தீர்த்தவாரிக்காக நித்யகல்யாணப் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.
    காரைக்கால் கடற்கரையில் சமுத்திர தீர்த்தவாரிக்காக நித்யகல்யாணப் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதிகாலை பல்லக்கில் புறப்பட்டு வீதியுலாவாக காரைக்கால் கடற்கரைக்கு எழுந்தருளினார்.

    அங்கு பால், தயிர், மஞ்சள், பழங்கள், சந்தனம் மற்றும் யாகத்தில் பூஜிக்கப்பட்ட புனித நீர் ஆகியவற்றால் அபிஷேகமும், தொடர்ந்து சமுத்திரத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெற்றது. தொடர்ந்து பெருமாளுக்கு தீபாராதனை நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர். சமுத்திர தீர்த்தவாரி நிகழ்ச்சியில் கோவில் அறங்காவலர் குழுவினர் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×