
அத்யயன உற்சவத்தையொட்டி முதல் நாள் மூலவர் மற்றும் உற்சவர் பெருமாள், தாயாருக்கு திருமஞ்சனம், உள்பிரகார புறப்பாடு நடைபெற்றது. 2-வது நாள் உற்சவர் பெருமாள் தாயார் லெக்ஷ்மிநாராயண மூர்த்தி அலங்காரத்தில் சேஷ வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா புறப்பாடு நடந்தது. பின்னர் நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார் திருவடி தொழுதல், சாற்றுமுறை, திவ்யபிரபந்தம் பாராயணம் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வானமாமலை ஜீயர் சுவாமிகள் மட நிர்வாகி கிருஷ்ணன் சுவாமி, ஜெகன்நாத கைங்கர்ய சபையினர் செய்திருந்தனர்.