என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ஜெகன்நாத பெருமாள் கோவிலில் சாமி வீதிஉலா புறப்பாடு
Byமாலை மலர்9 Feb 2021 4:47 AM GMT (Updated: 9 Feb 2021 4:47 AM GMT)
கும்பகோணத்தை அடுத்த நாதன்கோவில் ஜெகன்நாத பெருமாள் கோவிலில் அத்யயன உற்சவத்தையொட்டி மூலவர் மற்றும் உற்சவர் பெருமாள், தாயாருக்கு திருமஞ்சனம், உள்பிரகார புறப்பாடு நடைபெற்றது.
கும்பகோணத்தை அடுத்த நாதன்கோவில் ஜெகன்நாத பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் நடக்கும் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவையொட்டி ராப்பத்து, பகல் பத்து உற்சவம் நடத்துவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா காரணமாக ராப்பத்து, பகல் பத்து உற்சவங்கள் நடைபெறவில்லை. இதற்கு அத்யயன உற்சவம் செய்து சாமி வீதிஉலா புறப்பாடு நடைபெற்றது.
அத்யயன உற்சவத்தையொட்டி முதல் நாள் மூலவர் மற்றும் உற்சவர் பெருமாள், தாயாருக்கு திருமஞ்சனம், உள்பிரகார புறப்பாடு நடைபெற்றது. 2-வது நாள் உற்சவர் பெருமாள் தாயார் லெக்ஷ்மிநாராயண மூர்த்தி அலங்காரத்தில் சேஷ வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா புறப்பாடு நடந்தது. பின்னர் நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார் திருவடி தொழுதல், சாற்றுமுறை, திவ்யபிரபந்தம் பாராயணம் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வானமாமலை ஜீயர் சுவாமிகள் மட நிர்வாகி கிருஷ்ணன் சுவாமி, ஜெகன்நாத கைங்கர்ய சபையினர் செய்திருந்தனர்.
அத்யயன உற்சவத்தையொட்டி முதல் நாள் மூலவர் மற்றும் உற்சவர் பெருமாள், தாயாருக்கு திருமஞ்சனம், உள்பிரகார புறப்பாடு நடைபெற்றது. 2-வது நாள் உற்சவர் பெருமாள் தாயார் லெக்ஷ்மிநாராயண மூர்த்தி அலங்காரத்தில் சேஷ வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா புறப்பாடு நடந்தது. பின்னர் நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார் திருவடி தொழுதல், சாற்றுமுறை, திவ்யபிரபந்தம் பாராயணம் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வானமாமலை ஜீயர் சுவாமிகள் மட நிர்வாகி கிருஷ்ணன் சுவாமி, ஜெகன்நாத கைங்கர்ய சபையினர் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X