என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
கள்ளியடி குருநாதரின் குருபூஜை: 3 ஆயிரம் கிலோ அரிசியில் தயார் செய்யப்பட்ட புளியோதரை
Byமாலை மலர்6 Feb 2021 1:55 AM GMT (Updated: 6 Feb 2021 1:55 AM GMT)
கள்ளியடி குருநாதரின் 80-வது குருபூஜை விழாவை முன்னிட்டு 3 ஆயிரம் கிலோ அரிசியில் தயார் செய்யப்பட்ட புளியோதரை விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
வடமதுரை அருகே புதுப்பட்டியில் கள்ளியடி குருநாதரின் ஜீவசமாதி உள்ளது. இங்கு கள்ளியடி குருநாதரின் 80-வது குருபூஜை விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை பக்தர்கள் பால்குடம் எடுத்து புதுப்பட்டியின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்று கள்ளியடி குருநாதருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். இதைத்தொடர்ந்து பால், இளநீர், பன்னீர், சந்தனம், விபூதி உள்ளிட்ட 21 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. அதன்பின்னர் மகாதீபாராதனை காட்டப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.
மாலை 5 மணிக்கு 3 ஆயிரம் கிலோ அரிசியில் தயார் செய்யப்பட்ட புளியோதரை விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டனர். இதையடுத்து இரவில் கள்ளியடி குருநாதரின் உருவச்சிலை மின் அலங்காரத்தால் ஆன சப்பரத்தில் வைத்து ஊரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.
மாலை 5 மணிக்கு 3 ஆயிரம் கிலோ அரிசியில் தயார் செய்யப்பட்ட புளியோதரை விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டனர். இதையடுத்து இரவில் கள்ளியடி குருநாதரின் உருவச்சிலை மின் அலங்காரத்தால் ஆன சப்பரத்தில் வைத்து ஊரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X