என் மலர்
ஆன்மிகம்

புளியங்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் தெப்பத்திருவிழா
புளியங்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் தெப்பத்திருவிழா
புளியங்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் தெப்பத்திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தர்களின் பக்தி கோஷங்கள் முழங்க 11 முறை சுவாமி வலம் வந்தார்.
புளியங்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் தைப்பூச திருவிழா கடந்த மாதம் 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் ஒவ்வொரு சமுதாய மண்டகப்படிதாரர்கள் சார்பில் சுவாமி அழைப்பு, சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள், சுவாமி வீதிஉலா நிகழ்ச்சிகள் நடந்தது.
நேற்று முன்தினம் இரவு புன்னையாபுரம் யாதவர் சமுதாயம் சார்பில் தெப்பத்திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தர்களின் பக்தி கோஷங்கள் முழங்க 11 முறை சுவாமி வலம் வந்தார்.
புளியங்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு சாமிநாதன் தலைமையில், இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் ராஜ் மேற்பார்வையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். நிகழ்ச்சியில் பங்குனி உத்திர தேர்த் திருப்பணி குழு தலைவர் சங்கரநாராயணன், செயல் அலுவலர் கணேஷ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நேற்று முன்தினம் இரவு புன்னையாபுரம் யாதவர் சமுதாயம் சார்பில் தெப்பத்திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தர்களின் பக்தி கோஷங்கள் முழங்க 11 முறை சுவாமி வலம் வந்தார்.
புளியங்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு சாமிநாதன் தலைமையில், இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் ராஜ் மேற்பார்வையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். நிகழ்ச்சியில் பங்குனி உத்திர தேர்த் திருப்பணி குழு தலைவர் சங்கரநாராயணன், செயல் அலுவலர் கணேஷ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story