search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வடலூர் வள்ளலார் ஞானசபையில் தைபூச திருவிழா
    X
    வடலூர் வள்ளலார் ஞானசபையில் தைபூச திருவிழா

    கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது வடலூர் வள்ளலார் ஞானசபையில் தைபூச திருவிழா

    வடலூர் வள்ளலார் ஞானசபையில் தைபூச திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருப்பதால் இந்த ஆண்டு கலை நிகழ்ச்சிகள் தடைசெய்யப்பட்டுள்ளது.
    வடலூர் :

    கடலூர் மாவட்டம் வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்திய ஞானசபையில் ஆண்டுதோறும் தைப்பூச விழா நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டு தைபூச திருவிழாவையொட்டி வடலூர் வள்ளலார் ஞானசபையில் இன்று காலை 10 மணிக்கு கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று இரவு தருமச்சாலை மேடையில் சன்மார்க்க சொற்பொழிவு நடைபெறுகிறது.

    நாளை (28-ந்தேதி) தைப்பூச திருவிழாவையொட்டி காலை 6 மணி 10 மணி, பகல் 1 மணி, இரவு 7 , மணி 10 மணி, மறுநாள் காலை 5.30 ஆகிய 6 காலங்களில் 7 திரைநீக்கி ஜோதி தரிசனம் நடைபெறுகிறது.

    இதனை காண தமிழகம் மற்றும் உலகெங்கும் வாழும் தமிழர்கள், லட்சக்கணக்கான சன்மார்க்க அன்பர்கள் திரளுவது வழக்கம். இதற்காக தமிழகத்தின் பல பகுதியில் இருந்தும் வடலூ ருக்கு சிறப்பு பஸ் மற்றும் ரெயில்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    தைப்பூசத்தன்றுகாலை 10 மணிக்கு தருமச்சாலை மேடையில் சிறப்பு நிகழ்ச்சிகள் மாவட்ட கலெக்டர் சந்திர சேகர் சாகமூரி முன்னிலையிலும், தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத்தலைமையிலும் நடைபெறுகிறது.

    இதில் அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ. க்கள், மாவட்ட அரசு அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர். தைப்பூச விழாவிற்கு பின்னர் ஒருநாள் இடைவெளி விட்டு (30-ந் தேதி) பகல் 12 மணி முதல் மாலை 6 மணிவரை மேட்டுக்குப்பத்தில் வள்ளலார் சித்திப்பெற்ற திருஅறைதரிசனம் நடைபெறுகிறது.

    முன்னதாக வடலூர் ஞானசபையில் இருந்து வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் அடங்கிய பெட்டியை பூக்களால் அலங்கரித்து மேளதாளம் முழங்க வள்ளலார் சித்திபெற்ற திரு அறையில் உள்ள மேட்டுக்குப்பம் கொண்டு செல்லப்படும்.

    அங்கு பக்தர்கள் வழிபாட்டுக்கு பின்னர் மீண்டும் வடலூர் கொண்டு வரப்படும் தைப்பூச திருவிழா வையொட்டி பல்வேறு சன்மார்க்க சங்கத்தினர்களும், சொற்பொழிவுகள், இசை நிகழ்ச்சி, நாடகம் உள்ளிட்ட பல கலைநிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம்.

    ஆனால் இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருப்பதால் இந்த ஆண்டு அந்த கலை நிகழ்ச்சிகள் தடைசெய்யப்பட்டுள்ளது. தைப்பூச விழாவை யொட்டி வடலூர் பகுதிகளில் ஏராளமான கடைகள் அமைக்கப்படும். இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக கடைகள் அமைக்கப்படவில்லை.
    Next Story
    ×