பெண்களின் சபரிமலை என போற்றப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி திருவிழா பந்தல்கால் நாட்டுவிழா தைப்பூச நாளான நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில்
பெண்களின் சபரிமலை என போற்றப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி திருவிழா பந்தல்கால் நாட்டுவிழா தைப்பூச நாளான நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது
பெண்களின் சபரிமலை என போற்றப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி திருவிழா அடுத்த மாதம் (பிப்ரவரி) 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மார்ச் மாதம் 9-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. இதற்கான பந்தல்கால் நாட்டுவிழா தைப்பூச நாளான நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.
நாளை அதிகாலை 4.30 மணிக்கு நடை திறப்பு, 5.30 மணிக்கு அபிஷேகம், காலை 6.30 மணிக்கு உஷபூஜை, 9.30 மணிக்கு நிறை புத்தரிசி பூஜை, தொடர்ந்து பந்தல்கால் நாட்டுவிழா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
மேலும், நாளை ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் நடக்கும் இந்து சமய மாநாட்டிற்கான பந்தல்கால் நாட்டு விழாவும் நடக்கிறது.
Get In-depth Coverage of National and
InternationalPolitics | Business | Sports |
Cricket News and Score Update of IPL & TNPL, if you are a Chennai Super Kings- CSK or Chepauk Super Gillies-CSG fan, look no further as we have year round updates about these.