என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
தைப்பூசம், வார விடுமுறையையொட்டி பழனி கோவிலில் 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்
Byமாலை மலர்25 Jan 2021 3:40 AM GMT (Updated: 25 Jan 2021 3:40 AM GMT)
பழனி முருகன் கோவிலில், தைப்பூசம் மற்றும் வார விடுமுறையையொட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் சுமார் 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
முருகப்பெருமானின் 3-ம்படைவீடாக பழனி முருகன் கோவில் திகழ்கிறது. இங்கு சாமி தரிசனம் செய்ய தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர்.
குறிப்பாக வார விடுமுறை, மாத கார்த்திகை, சஷ்டி ஆகிய விசேஷ நாட்களில் பக்தர்கள் அதிகம் வருகின்றனர். இந்நிலையில் பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 22-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி பாதயாத்திரையாக வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக காலை, மாலை வேளையில் திண்டுக்கல் சாலை, உடுமலை சாலை, கிரிவீதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
தைப்பூச திருவிழா தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் நேற்று வார விடுமுறை என்பதால் பக்தர்கள் அதிகாலை முதலே பழனியில் குவிந்தனர். இதனால் அடிவாரம் பாதவிநாயகர் கோவில் பகுதி, சன்னதி வீதி, பூங்கா ரோடு, பஸ்நிலையம் ஆகிய இடங்களில் பக்தர்கள் திரளாக காணப்பட்டனர்.
பக்தர்கள் வருகையால் திருஆவினன்குடி கோவில், மலைக்கோவிலில் சாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். மேலும் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் செல்லும் பாதைகளான படிப்பாதை, மின்இழுவை ரெயில், ரோப்கார் நிலையத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.
அவர்கள் மலைக்கோவிலில் சுமார் 2 மணிநேரம் காத்திருந்து முருகனை தரிசனம் செய்தனர். தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தற்போது பல இடங்களில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே நாளை நடக்கும் குடியரசு தின விழாவை முன்னிட்டு ராஜகோபுரம், தங்க கோபுரம் ஆகியவற்றுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
குறிப்பாக வார விடுமுறை, மாத கார்த்திகை, சஷ்டி ஆகிய விசேஷ நாட்களில் பக்தர்கள் அதிகம் வருகின்றனர். இந்நிலையில் பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 22-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி பாதயாத்திரையாக வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக காலை, மாலை வேளையில் திண்டுக்கல் சாலை, உடுமலை சாலை, கிரிவீதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
தைப்பூச திருவிழா தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் நேற்று வார விடுமுறை என்பதால் பக்தர்கள் அதிகாலை முதலே பழனியில் குவிந்தனர். இதனால் அடிவாரம் பாதவிநாயகர் கோவில் பகுதி, சன்னதி வீதி, பூங்கா ரோடு, பஸ்நிலையம் ஆகிய இடங்களில் பக்தர்கள் திரளாக காணப்பட்டனர்.
பக்தர்கள் வருகையால் திருஆவினன்குடி கோவில், மலைக்கோவிலில் சாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். மேலும் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் செல்லும் பாதைகளான படிப்பாதை, மின்இழுவை ரெயில், ரோப்கார் நிலையத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.
அவர்கள் மலைக்கோவிலில் சுமார் 2 மணிநேரம் காத்திருந்து முருகனை தரிசனம் செய்தனர். தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தற்போது பல இடங்களில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே நாளை நடக்கும் குடியரசு தின விழாவை முன்னிட்டு ராஜகோபுரம், தங்க கோபுரம் ஆகியவற்றுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X