என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
நெல்லையப்பர் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றம்
Byமாலை மலர்20 Jan 2021 7:42 AM GMT (Updated: 20 Jan 2021 7:42 AM GMT)
நெல்லையப்பர் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நெல்லுக்கு வேலியிட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது.
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆண்டு தோறும் தைப்பூச திருவிழா விமரிசையாக நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டு தைப்பூச திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைமுன்னிட்டு காலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றது. 7 மணி அளவில் கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. இதில் செயல் அலுவலர் ராமராஜா மற்றும் ஊழியர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தைப்பூச திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான ‘‘நெல்லுக்கு வேலியிட்ட நிகழ்ச்சி’’ நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) பகல் 12 மணிக்கு நடைபெறுகிறது. அன்று இரவு 8 மணிக்கு பஞ்சமூர்த்திகளுடன், சுவாமி-அம்பாள் வீதி உலா நடைபெறுகிறது.
28-ந் தேதி தைப்பூசம் தினத்தன்று (வியாழக்கிழமை) தீர்த்தவாரி நடைபெறுகிறது. மேலும் புகழ் பெற்ற கைலாசபுரத்தில் உள்ள சிந்துபூந்துறை தைப்பூச தீர்த்தவாரி மண்டபத்தில் வைத்து தீர்த்தவாரி நடக்கிறது. இதையொட்டி சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், அகஸ்தியர், தாமிரபரணி, குங்கிலியநாயனார், சண்டிகேசுவரர், அஸ்திரதேவர், அஸ்திரதேவி ஆகிய மூர்த்திகளுடன் பகல் 12.30 மணிக்கு கோவிலில் இருந்து புறப்பட்டு தைப்பூச மண்டபத்தில் இறங்குகின்றனர். அங்கு தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரியும், சிறப்பு தீபாராதனையும் நடைபெறுகிறது. பின்னர் மாலையில் சுவாமி மண்டபத்தில் இருந்து புறப்பட்டு கோவிலை சென்றடைகின்றனர்.
29-ந் தேதி சவுந்திர சபா மண்டபத்தில் பிருங்கி ரத முனி சிரேஷ்டர்களுக்கு திருநடனம் காட்சியருளும், சவுந்திர சபா நடராஜர் திருநடனக்காட்சி நடக்கிறது. 30-ந் தேதி (சனிக்கிழமை) இரவு 7 மணிக்கு சந்திரபுஷ்கரணி என்ற வெளித்தெப்பகுளத்தில் தெப்பத்திருவிழா நடைபெறுகிறது.
தைப்பூச திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான ‘‘நெல்லுக்கு வேலியிட்ட நிகழ்ச்சி’’ நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) பகல் 12 மணிக்கு நடைபெறுகிறது. அன்று இரவு 8 மணிக்கு பஞ்சமூர்த்திகளுடன், சுவாமி-அம்பாள் வீதி உலா நடைபெறுகிறது.
28-ந் தேதி தைப்பூசம் தினத்தன்று (வியாழக்கிழமை) தீர்த்தவாரி நடைபெறுகிறது. மேலும் புகழ் பெற்ற கைலாசபுரத்தில் உள்ள சிந்துபூந்துறை தைப்பூச தீர்த்தவாரி மண்டபத்தில் வைத்து தீர்த்தவாரி நடக்கிறது. இதையொட்டி சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், அகஸ்தியர், தாமிரபரணி, குங்கிலியநாயனார், சண்டிகேசுவரர், அஸ்திரதேவர், அஸ்திரதேவி ஆகிய மூர்த்திகளுடன் பகல் 12.30 மணிக்கு கோவிலில் இருந்து புறப்பட்டு தைப்பூச மண்டபத்தில் இறங்குகின்றனர். அங்கு தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரியும், சிறப்பு தீபாராதனையும் நடைபெறுகிறது. பின்னர் மாலையில் சுவாமி மண்டபத்தில் இருந்து புறப்பட்டு கோவிலை சென்றடைகின்றனர்.
29-ந் தேதி சவுந்திர சபா மண்டபத்தில் பிருங்கி ரத முனி சிரேஷ்டர்களுக்கு திருநடனம் காட்சியருளும், சவுந்திர சபா நடராஜர் திருநடனக்காட்சி நடக்கிறது. 30-ந் தேதி (சனிக்கிழமை) இரவு 7 மணிக்கு சந்திரபுஷ்கரணி என்ற வெளித்தெப்பகுளத்தில் தெப்பத்திருவிழா நடைபெறுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X