search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சோலைமலை முருகன்
    X
    சோலைமலை முருகன்

    சோலைமலை முருகன் கோவில் தைப்பூச திருவிழா 19-ந்தேதி தொடங்குகிறது

    சோலைமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா வருகிற 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    மதுரை அருகே அழகர்மலை உச்சியில் முருகப்பெருமானின் 6-ம் படைவீடான சோலைமலை முருகன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் தைப்பூச திருவிழாவும் ஒன்றாகும்.

    இந்த விழா வருகிற 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. காலை 10.40 மணிக்கு தங்க கொடி மரத்தில் மேள தாளம் முழங்க கொடி ஏற்றப்படும். பின்னர் உற்சவர் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு விசேஷ பூஜைகள், சரவிளக்கு தீபாராதனைகள் நடைபெறும். தொடர்ந்து மூலவர் சன்னதியில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் நின்ற திருக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி தருவார்.

    அன்று மாலையில் பூத வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும். 20-ந்தேதி காலை யாக சாலை பூஜைகள் நடைபெறும். பின்னர் உற்சவருக்கு மகா அபிஷேகமும், யாக சாலை பூஜைகளும், மாலை 6 மணிக்கு அன்ன வாகனத்தில் சுவாமி புறப்பாடும் நடைபெறும். 21-ந் தேதி காலை வழக்கம் போல் பூஜைகளும், மாலை 6 மணிக்கு காமதேனு வாகனத்தில் சுவாமி புறப்பாடும் நடைபெறும்.

    22-ந் தேதி காலையில் வழக்கம் போல் பூஜைகளும், மாலையில் ஆட்டு கிடாய் வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும். 23-ந்தேதி மாலையில் பூச்சப்பர விழா, 24-ந் தேதி மாலையில் யானை வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும்.

    25-ந் தேதி மாலையில் பல்லக்கு வாகனத்தில் சாமி புறப்பாடும், 26-ந் தேதி மாலையில் குதிரை வாகனத்தில் சாமி புறப்பாடு, 27-ந்தேதி மாலை வெள்ளிமயில் வாகனத்தில் சாமி புறப்பாடு நடைபெறுகிறது.

    28-ந்தேதி காலையில் யாகசாலை பூஜைகள், தீர்த்தவாரியும், உற்சவ மூர்த்திக்கு மகா அபிஷேகமும், பூஜைகளும் கொடி இறக்கமும் நடைபெறும்.

    பின்னர் சாமிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை, இருப்பிடம் சேருவதும் நடைபெறும்.

    இந்த திருவிழாவிற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி அனிதா மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×