என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பஞ்சவடி கோவில் அனுமன்
    X
    பஞ்சவடி கோவில் அனுமன்

    பஞ்சவடி கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நாளை நடக்கிறது

    ஜெயமாருதி சேவா டிரஸ்ட் சார்பில் பஞ்சவடி கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நாளை நடக்கிறது.
    திண்டிவனம்-புதுச்சேரி நெடுஞ்சாலையில் பஞ்சவடி கோவில் (சேத்திரம்) அமைந்துள்ளது. இங்கு பட்டாபிஷேக ராமச்சந்திர மூர்த்தி, ஸ்ரீவாரி வெங்கடாஜலபதி, விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் சன்னதிகள் அமைந்துள்ளன. இந்த கோவிலில் 36 அடி விஸ்வரூப ஆஞ்சநேயர் சுவாமிக்கு நாளை (செவ்வாய்கிழமை) அனுமன் ஜெயந்தி விழா வெகு விமரிசையாக நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாட்டை ஜெயமாருதி சேவா டிரஸ்ட் ஏற்பாடு செய்துள்ளது.

    இதுகுறித்து பஞ்சமுக ஜெயமாருதி சேவா டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் கோதண்டராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    பஞ்சவடி கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நாளை (12-ந் தேதி) நடக்கிறது. இதையொட்டி பூஜைகள் கடந்த 8-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணிக்கு ராமச்சந்திர மூர்த்தி சன்னதியில் காராம்பசுவுக்கு விசேஷ பூஜை மற்றும் கோ பூஜை நடைபெறும். அதனைத் தொடர்ந்து தனூர் பூஜைகள் நடைபெறும். 6 மணிக்கு யாகசாலை பூஜைகள் நடைபெறும்.

    காலை 8.30 மணிக்கு ஆஞ்சநேய சுவாமிக்கு 2,500 லிட்டர் பாலுடன் சந்தனம், கான்பூரில் இருந்து வரவேற்கப்பட்ட சுத்தமான பன்னீர் போன்ற திரவியங்களால் அபிஷேகம் நடைபெறும். பால் அபிஷேகத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் டிரஸ்டின் அனுமதிபெற்று கோவிலில் இருந்து பால் பெற்று இறைவனுக்கான அபிஷேகத்தில் பங்கு பெறலாம். திருமஞ்சனம், விஷேச அலங்கார ஆராதனைக்கு பின்னர் பகல் 12 மணி அளவில் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் ஆஞ்சநேயரை வழிபட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மாலை 4 மணி அளவில் திருக்கல்யாண வைபவம் நடைபெறும். பூஜைகளை பாப்பாகுடி வெங்கடேச பட்டாச்சாரியார், பஞ்சவடி கோவில் பட்டர் ரங்கராஜ பட்டாச்சாரியார், வேத விற்பன்னர்கள் நடத்தி வைக்க உள்ளனர். பக்தர்கள் முக கவசம் அணிந்து வரவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை பஞ்சமுக ஜெயமாருதி சேவா டிரஸ்ட் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் எம்.கோதண்டராமன், கூடுதல் தலைவர் ஆர்.யுவராஜன், செயலாளர் நரசிம்மன், பொருளாளர் கச்சபேஸ்வரர், அறங்காவலர்கள் பழனியப்பன், செல்வம், வெங்கட்ராமன், திருமலை நிர்வாக அதிகாரி பாலசுப்ரமணியன் ஆகியோர் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×