என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
பழனி அழகுநாச்சி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
Byமாலை மலர்8 Jan 2021 4:35 AM GMT (Updated: 8 Jan 2021 4:35 AM GMT)
பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பாதயாத்திரை வரும் பக்தர்களின் நலனுக்காக ஆனந்த விநாயகர் சன்னதி, வீரதுர்க்கையம்மன் ஆகிய கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பாதயாத்திரை வரும் பக்தர்களின் நலனுக்காக ஆண்டுதோறும் பழனி மலைக்கோவில் ஆனந்தவிநாயகர் சன்னதி மற்றும் நான்கு கிரிவீதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. அதன்படி ஆனந்த விநாயகர் சன்னதி, வீரதுர்க்கையம்மன் ஆகிய கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
இந்தநிலையில் நேற்று பழனி கிழக்கு கிரிவீதியில் உள்ள அழகுநாச்சி அம்மன் கோவிலில் பக்தர்கள் நலன்பெற வேண்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக அங்கு கலசபூஜை, புண்ணியாக வாஜனம், பாராயணம், கணபதி ஹோமம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் கிராந்திகுமார்படி, உதவி ஆணையர் செந்தில்குமார், நிகழ்ச்சி உபயதாரர் கந்தவிலாஸ் செல்வகுமார், நவீன்விஷ்ணு, நரேஷ்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X