search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கீழப்பாவூர் கிருஷ்ணன் கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாணத்துக்கு சீர்வரிசை கொண்டு வந்த பெண்கள்
    X
    கீழப்பாவூர் கிருஷ்ணன் கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாணத்துக்கு சீர்வரிசை கொண்டு வந்த பெண்கள்

    கீழப்பாவூர் கிருஷ்ணன் கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாணத்துக்கு சீர்வரிசை கொண்டு வந்த பெண்கள்

    கீழப்பாவூர் வேணுகோபால கிருஷ்ணசுவாமி கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பெண்கள் திரளாக கலந்து சீர்வரிசை கொண்டு வந்தனர்.
    கீழப்பாவூர் வேணுகோபால கிருஷ்ணசுவாமி கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதையொட்டி காலை 6 மணிக்கு கும்ப ஜெபம், அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. மாலை 6 மணிக்கு ஜெபம், சஹஸ்ரநாம அர்ச்சனை. இரவு 7.00 மணிக்கு சீர்வரிசையுடன் மாப்பிள்ளை அழைப்பு, ஆண்டாள் எதிர் சேவை நடைபெற்றது. 

    7.30 சுவாமிக்கும், ஆண்டாளுக்கும் மாலை மாற்றுதல் வைபவம் நடைபெற்றது. தொடர்ந்து இரவு 8 மணிக்கு ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. 9 மணிக்கு தீபாராதனை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பெண்கள் திரளாக கலந்து சீர்வரிசை கொண்டு வந்தனர்.
    Next Story
    ×