என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
அத்திவரதர் சிலை வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளம் நிரம்பியது
Byமாலை மலர்10 Dec 2020 2:57 AM GMT (Updated: 10 Dec 2020 2:57 AM GMT)
காஞ்சீபுரத்தில் பெய்த தொடர் மழை காரணமாக, அனந்தசரஸ் குளத்தில் அத்திவரதர் வைக்கப்பட்டுள்ள மண்டபத்தின் 4 கால்களும் மூழ்கிய நிலையில் முழுமையாக நிரம்பியது.
108 திவ்ய தேசங்களில் ஒன்றான உலக பிரசித்தி பெற்ற காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அனந்தசரஸ் மற்றும் பொற்றாமரைக் குளம் உள்ளது. இந்த கோவிலில் கடந்த ஆண்டு நடைபெற்ற அத்தி வரதர் வைபவத்தில் பெருமாள் நின்ற மற்றும் சயன கோலத்தில் காட்சியளித்தார். உலக மக்களை திரும்பிப் பார்க்க வைத்த 48 நாட்கள் நடைபெற்ற வைபவம் முடிவடைந்து, மீண்டும் பத்திரமாக அத்திவரதர் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டார்.
இந்த நிலையில், தற்போது காஞ்சீபுரத்தில் பெய்த தொடர் மழை காரணமாக, அனந்தசரஸ் குளத்தில் அத்திவரதர் வைக்கப்பட்டுள்ள மண்டபத்தின் 4 கால்களும் மூழ்கிய நிலையில் முழுமையாக நிரம்பியது. கடந்த 2015-ம் ஆண்டு பெய்த கனமழைக்கு பின் தற்போது தான் இந்த குளம் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
தொடர் மழையால் இந்த குளம் நிரம்பி வெளியேறும் நீர் கிழக்கு ராஜகோபுரம் அருகில் உள்ள பொற்றாமரைக் குளத்துக்கு செல்லும். இதன் காரணமாக தற்போது இந்த குளமும் நிரம்பி உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் இதை கண்டு மகிழ்ச்சியுடன் தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X