என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
கீழப்பெரும்பள்ளம் நாகநாதசுவாமி கோவிலில் 1-ந்தேதி கேது பெயர்ச்சி வழிபாடு
Byமாலை மலர்24 Aug 2020 9:37 AM GMT
நாகை மாவட்டம் பூம்புகார் அருகே உள்ள கீழப்பெரும்பள்ளம் நாகநாதசுவாமி கோவிலில் கேது பெயர்ச்சி வழிபாடு வருகிற 1-ந்தேதி நடக்கிறது.
நாகை மாவட்டம் பூம்புகார் அருகே உள்ள கீழப்பெரும்பள்ளம் நாகநாதன்கோவில் கிராமத்தில் சவுந்தரநாயகி அம்மன் சமேத நாகநாதசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நவக்கிரகங்களில் ஒன்றான கேது பகவானுக்கு தனிசன்னதி உள்ளது. ஞானகாரகன் என்று அழைக்கப்படும் கேதுபகவானை வழிபட்டால் குடும்ப பிரச்சினைகள், குழந்தைபேறு, திருமணத்தடை, நீதிமன்ற வழக்குகள், பித்ருக்கள் தோஷம் உள்ளிட்டவை நீங்குவதாக ஐதீகம்.
பல்வேறு சிறப்புகளை கொண்ட கேதுபகவான் 1½ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பின்னோக்கி பெயர்ச்சி அடைவார். முன்னொரு காலத்தில் அசுரர்களும், தேவர்களும் இணைந்து திருபாற்கடலை கடைந்து அமிர்தம் எடுத்து உண்டால் நீண்ட காலம் வாழலாம் என்ற எண்ணத்தில் பாற்கடலில் அமிர்தம் எடுக்க முடிவு செய்தனர்.
அப்போது பாற்கடலை கடைய வாசுகி என்ற பாம்பை மத்தாக பயன்படுத்தினார். பாற்கடலை கடைந்த பின்னனர் உடல் முழுவதும் காயம்பட்ட வாசுகி பாம்பை அசுரர்கள் துாக்கி எறிந்தனர். அப்போது வாசுகி பாம்பு வந்து விழுந்த இடம் நாகநாதன்கோவில் பகுதியில் உள்ள முங்கில்தோப்பு ஆகும். பலத்த காயங்களுடன் முங்கில்தோப்பில் கிடந்த வாசுகி அருகில் உள்ள நாகநாதசுவாமியை வணங்கியதாகவும், இதனால் இரக்கமுற்ற சிவபெருமான் வாசுகி பாம்பு முன்பு தோன்றி காட்சியளித்தார். அப்போது வேண்டிய வரம் கேள் என்று கேட்டபோது சிவபெருமானிடம் வாசுகி பாம்பு தனக்கு கிரக பதவி கொடுக்குமாறு வேண்டிகொண்டதால், சிவபெருமான் நாகநாதசுவாமிகோவிலில் தனி சன்னதியில் கேது கிரகமாக இருந்து அருளாசி புரியுமாறு வேண்டிகொண்டார்.
அடுத்தமாதம்(செப்டம்பர்) 1-ந்தேதி (செவ்வாய்கிழமை) மதியம் 2.16 மணிக்கு தனுசு ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இந்த பெயர்ச்சியின் போது மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம், துலாம், விருச்சிகம், தனுசு, கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகாரர்கள் பரிகாரம் செய்து கொள்ளவேண்டும். தற்போது கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் கோவிலின் உட்பகுதியில் பக்தர்கள் இன்றி பெயர்ச்சி வழிபாடு நடக்கிறது.
பல்வேறு சிறப்புகளை கொண்ட கேதுபகவான் 1½ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பின்னோக்கி பெயர்ச்சி அடைவார். முன்னொரு காலத்தில் அசுரர்களும், தேவர்களும் இணைந்து திருபாற்கடலை கடைந்து அமிர்தம் எடுத்து உண்டால் நீண்ட காலம் வாழலாம் என்ற எண்ணத்தில் பாற்கடலில் அமிர்தம் எடுக்க முடிவு செய்தனர்.
அப்போது பாற்கடலை கடைய வாசுகி என்ற பாம்பை மத்தாக பயன்படுத்தினார். பாற்கடலை கடைந்த பின்னனர் உடல் முழுவதும் காயம்பட்ட வாசுகி பாம்பை அசுரர்கள் துாக்கி எறிந்தனர். அப்போது வாசுகி பாம்பு வந்து விழுந்த இடம் நாகநாதன்கோவில் பகுதியில் உள்ள முங்கில்தோப்பு ஆகும். பலத்த காயங்களுடன் முங்கில்தோப்பில் கிடந்த வாசுகி அருகில் உள்ள நாகநாதசுவாமியை வணங்கியதாகவும், இதனால் இரக்கமுற்ற சிவபெருமான் வாசுகி பாம்பு முன்பு தோன்றி காட்சியளித்தார். அப்போது வேண்டிய வரம் கேள் என்று கேட்டபோது சிவபெருமானிடம் வாசுகி பாம்பு தனக்கு கிரக பதவி கொடுக்குமாறு வேண்டிகொண்டதால், சிவபெருமான் நாகநாதசுவாமிகோவிலில் தனி சன்னதியில் கேது கிரகமாக இருந்து அருளாசி புரியுமாறு வேண்டிகொண்டார்.
அடுத்தமாதம்(செப்டம்பர்) 1-ந்தேதி (செவ்வாய்கிழமை) மதியம் 2.16 மணிக்கு தனுசு ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இந்த பெயர்ச்சியின் போது மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம், துலாம், விருச்சிகம், தனுசு, கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகாரர்கள் பரிகாரம் செய்து கொள்ளவேண்டும். தற்போது கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் கோவிலின் உட்பகுதியில் பக்தர்கள் இன்றி பெயர்ச்சி வழிபாடு நடக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X