search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தென்காளகஸ்தி
    X
    தென்காளகஸ்தி

    தென்காளகஸ்தி சிவன் கோவிலில் ராகு, கேது பெயர்ச்சி விழா

    அடுத்த மாதம் (செப்டம்பர்) 1-ந் தேதி ஈத்தாமொழி அருகே இலந்தையடித்தட்டில் அமைந்துள்ள ராகு, கேது, சனீஸ்வரர் பரிகார ஸ்தலமான தென்காளகஸ்தி சிவன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
    அடுத்த மாதம் (செப்டம்பர்) 1-ந் தேதி மதியம் 2.8 மணிக்கு ராகு பகவான் ரிஷப ராசிக்கும், கேது பகவான் விருட்சிக ராசிக்கும் பெயர்ச்சி அடைகிறார்கள். அன்றைய தினம் ஈத்தாமொழி அருகே இலந்தையடித்தட்டில் அமைந்துள்ள ராகு, கேது, சனீஸ்வரர் பரிகார ஸ்தலமான தென்காளகஸ்தி சிவன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

    1-ந் தேதி அதிகாலை 5.30 மணிக்கு கணபதி ஹோமம் நடைபெறும். பின்னர், ராகு கேது பகவானுக்கு காலை 8 மணி, பகல் 11 மணி, மதியம் 2.8 மணி, மாலை 5.30 மணி மற்றும் இரவு 8 மணிக்கு 5 காலை பூஜை, அபிஷேகம், அலங்காரம் நடைபெறும். இதில், மேஷம், ரிஷபம், சிம்மம், துலாம், கும்பம் ஆகிய ராசிக்காரர்களுக்கு பரிகார பூஜையும், மீனம், மிதுனம், கடகம், கன்னி, விருச்சிகம், தனுசு, மகரம் ஆகிய ராசிக்காரர்களுக்கு அர்ச்சனையும் நடத்தப்படும்.

    மக்கள் நெருக்கத்தை தவிர்க்க நேரில் வர முடியாதவர்களுக்கு தனி தனியாக பெயர் ராசி மூலம் பரிகார பூஜையும், அர்ச்சனையும் நடத்தப்படும். இதற்கான ஏற்பாடுகளை தென்காளகஸ்தி சிவாலய திருப்பணி கமிட்டி உறுப்பினர்கள் செய்து வருகிறார்கள். 
    Next Story
    ×