என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
தஞ்சை பெரியகோவிலில் ஆஷாட நவராத்திரி விழா தொடக்கம்
Byமாலை மலர்2 July 2019 4:20 AM GMT (Updated: 2 July 2019 4:20 AM GMT)
தஞ்சை பெரிய கோவிலில் தனி சன்னதியில் வீற்றிருந்து அருள்பாலித்து வரும் வராகி அம்மனுக்கு இந்த ஆண்டுக்கான ஆஷாட நவராத்திரி விழா தொடங்கியது.
தஞ்சை பெரிய கோவிலில் தனி சன்னதியில் வீற்றிருந்து அருள்பாலித்து வரும் வராகி அம்மனுக்கு ஆண்டு தோறும் ஆஷாட நவராத்திரி விழா 11 நாட்கள் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு ஆஷாட நவராத்திரி விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி காலை 8.30 மணிக்கு கணபதிஹோமம் நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து வராகி அம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், பழங்கள் மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. மாலையில் வராகி அம்மனுக்கு இனிப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். விழாவின் 2-ம் நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) வராகி அம்மன் மஞ்சள் அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார்.
3-வது நாள் குங்கும அலங்காரம், 4-வது நாள் சந்தன அலங்காரம், 5-வது நாள் தேங்காய்ப்பூ அலங்காரம், 6-வது நாள் மாதுளை அலங்காரம், 7-வது நாள் நவதானிய அலங்காரம், 8-வது நாள் வெண்ணெய் அலங்காரம், 9-வது நாள் கனிவகை அலங்காரம், 10-வது நாள் காய்கறி அலங்காரம், 11-வது நாள் புஷ்ப அலங்காரத்தில் வராகி அம்மன் அருள்பாலிக்கிறார்.
விழாவின் கடைசி நாளில் வராகி அம்மன் திருவீதி உலாவும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜாபோன்ஸ்லே, உதவி ஆணையர் பரணிதரன், செயல் அலுவலர் மாதவன், கண்காணிப்பாளர்கள் செல்வம், சுரேஷ், மற்றும் ஆஷாட நவராத்திரி விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
அதைத்தொடர்ந்து வராகி அம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், பழங்கள் மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. மாலையில் வராகி அம்மனுக்கு இனிப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். விழாவின் 2-ம் நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) வராகி அம்மன் மஞ்சள் அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார்.
3-வது நாள் குங்கும அலங்காரம், 4-வது நாள் சந்தன அலங்காரம், 5-வது நாள் தேங்காய்ப்பூ அலங்காரம், 6-வது நாள் மாதுளை அலங்காரம், 7-வது நாள் நவதானிய அலங்காரம், 8-வது நாள் வெண்ணெய் அலங்காரம், 9-வது நாள் கனிவகை அலங்காரம், 10-வது நாள் காய்கறி அலங்காரம், 11-வது நாள் புஷ்ப அலங்காரத்தில் வராகி அம்மன் அருள்பாலிக்கிறார்.
விழாவின் கடைசி நாளில் வராகி அம்மன் திருவீதி உலாவும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜாபோன்ஸ்லே, உதவி ஆணையர் பரணிதரன், செயல் அலுவலர் மாதவன், கண்காணிப்பாளர்கள் செல்வம், சுரேஷ், மற்றும் ஆஷாட நவராத்திரி விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X