search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் தெப்பத் திருவிழா
    X

    சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் தெப்பத் திருவிழா

    சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் சித்திரைத் தெப்பத்திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் சித்திரை மாத தெப்பத் திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி தினமும் வாகன பவனி, சப்பர ஊர்வலம், அலங்கார தீபாராதனை, சமய சொற்பொழிவு, பக்தி மெல்லிசை, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    9-ம் திருவிழாவான நேற்று முன்தினம் தேரோட்டமும், சப்தா வர்ண நிகழ்ச்சியும் நடந்தது. திருவிழாவின் இறுதி நாளான நேற்று தெப்பத்திருவிழா நடைபெற்றது.

    இதனையொட்டி இரவு 8 மணிக்கு கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட தட்டுவாகனங்களில் சுவாமி, அம்பாள், பெருமாள் ஆகியோர் மேளதாளத்துடன் தெப்பத்தில் எழுந்தருளினர்.

    தொடர்ந்து தெப்பக்குளத்தை தெப்பம் 3 முறை சுற்றி வந்தது. முதல் சுற்றை காக்கமூர் இளைஞர்களும், 2-வது சுற்றை மேலத்தெரு இளைஞர்களும், 3-வது சுற்றை கீழத்தெரு இளைஞர்களும் வடம்பிடித்து இழுத்து வந்தனர்.

    3-வது சுற்றின் முடிவில் அலங்கார தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து வாகனங்களில் சுவாமி, அம்பாள், பெருமாள் எழுந்தருளி ரதவீதிகள் வழியே உலா வந்தனர். அப்போது பக்தர்கள் திருக்கண் சார்த்தி வழிபட்டனர்.
    Next Story
    ×