search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மதுரைக்கு புறப்பட்டது கள்ளழகருக்கு சூட்டுவதற்கு ஆண்டாள் சூடிய மாலை
    X

    மதுரைக்கு புறப்பட்டது கள்ளழகருக்கு சூட்டுவதற்கு ஆண்டாள் சூடிய மாலை

    ஆண்டாள் சூடிய மாலை, கிளிகள், வஸ்திரம் போன்றவை மேளதாளங்கள் முழங்க கோவிலுக்கு வெளியே கொண்டு வரப்பட்டன. அவை மாட வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து மதுரை புறப்பட்டது.
    ஒவ்வொரு ஆண்டும் மதுரையில் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும்போது ஆண்டாள் சூடிய மாலை அணிந்து கொண்டு இறங்குவது வழக்கமாகும். அதேபோல் இந்த ஆண்டும் ஆற்றில் அழகர் இறங்கும் நிகழ்ச்சி நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இதற்காக ஆண்டாள் அணிந்த மாலை ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து புறப்படும் நிகழ்ச்சி நேற்று மதியம் நடைபெற்றது. அழகர் சூடுவதற்காக பிரத்தியேகமாக தயார் செய்யப்பட்ட மாலை நேற்று ஆண்டாளுக்கு அணிவிக்கப்பட்டது.

    பின்னர் ஆண்டாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சிறப்பு பூஜைகள் முடிவடைந்தவுடன் ஒரு கூடையில் வைத்து ஆண்டாள் சூடிய மாலை, கிளிகள், வஸ்திரம் போன்றவை எடுத்து வைக்கப்பட்டு மேளதாளங்கள் முழங்க கோவிலுக்கு வெளியே கொண்டு வரப்பட்டன. அவை மாட வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து மதுரை புறப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர் மட்டுமன்றி விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் திரண்டு வந்து பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோவன் ஆகியோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×