search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சிவராத்திரியும்.. பிற கதைகளும்..
    X

    சிவராத்திரியும்.. பிற கதைகளும்..

    சிவராத்திரி தொடர்புடைய பல்வேறு கதைகளை நடைமுறையில் சொல்லப்படுகிறது. அவற்றில் சிலவற்றை பற்றி விரிவாக பார்க்கலாம்.
    * தங்களில் யார் பெரியவர்? என்பதை நிலைநாட்டுவதற்காக, பிரம்மாவும், விஷ்ணுவும் சிவபெருமானின் அடி முடியை தேடிச் சென்றனர். அவர்கள் இருவரின் அகந்தையை அழிக்க நினைத்த ஈசன், அடி முடி காண முடியாத நிலையில், நெருப்பு பிழம்பாக ஓங்கி உயர்ந்து நின்றார். அப்படி நெருப்பு பிழம்பாக, சிவபெருமான் காட்சியளித்த தினமே ‘மகா சிவராத்திரி’ என்று சொல்லப்படுகிறது.

    * தேவர்களும் அசுரர்களும், அமிர்தம் பெறுவதற்காக பாற்கடலைக் கடைந்தனர். அப்போது கடலில் இருந்து உலகையே அழிக்கும் நஞ்சு வெளிப்பட்டது. அந்த விஷத்தை அருந்தி, உலக உயிர்களை சிவபெருமான் காத்தார். அந்த நாளே பிரதோஷம் ஆகும். ஆனால் அமிர்தம் கிடைப்பதற்காக தேவர்கள் பாற்கடலைக் கடைய வேண்டியதிருந்ததால், அமிர்தம் கிடைத்த பிறகான ஒரு நாளில், விஷத்தில் இருந்து உயிர்களைக் காத்த இறைவனுக்கு, அவர்கள் நன்றி தெரிவித்தனர். ஒரு நாள் இரவு முழுவதும் கண் விழித்திருந்து, சிவபெருமானை வணங்கி பூஜித்தனர். அந்த நாளே ‘மகா சிவராத்திரி’ என்றும் மற்றொரு கதை சொல்கிறது.
    Next Story
    ×