என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
சிவராத்திரியும்.. பிற கதைகளும்..
Byமாலை மலர்28 Feb 2019 9:18 AM GMT (Updated: 28 Feb 2019 9:18 AM GMT)
சிவராத்திரி தொடர்புடைய பல்வேறு கதைகளை நடைமுறையில் சொல்லப்படுகிறது. அவற்றில் சிலவற்றை பற்றி விரிவாக பார்க்கலாம்.
* தங்களில் யார் பெரியவர்? என்பதை நிலைநாட்டுவதற்காக, பிரம்மாவும், விஷ்ணுவும் சிவபெருமானின் அடி முடியை தேடிச் சென்றனர். அவர்கள் இருவரின் அகந்தையை அழிக்க நினைத்த ஈசன், அடி முடி காண முடியாத நிலையில், நெருப்பு பிழம்பாக ஓங்கி உயர்ந்து நின்றார். அப்படி நெருப்பு பிழம்பாக, சிவபெருமான் காட்சியளித்த தினமே ‘மகா சிவராத்திரி’ என்று சொல்லப்படுகிறது.
* தேவர்களும் அசுரர்களும், அமிர்தம் பெறுவதற்காக பாற்கடலைக் கடைந்தனர். அப்போது கடலில் இருந்து உலகையே அழிக்கும் நஞ்சு வெளிப்பட்டது. அந்த விஷத்தை அருந்தி, உலக உயிர்களை சிவபெருமான் காத்தார். அந்த நாளே பிரதோஷம் ஆகும். ஆனால் அமிர்தம் கிடைப்பதற்காக தேவர்கள் பாற்கடலைக் கடைய வேண்டியதிருந்ததால், அமிர்தம் கிடைத்த பிறகான ஒரு நாளில், விஷத்தில் இருந்து உயிர்களைக் காத்த இறைவனுக்கு, அவர்கள் நன்றி தெரிவித்தனர். ஒரு நாள் இரவு முழுவதும் கண் விழித்திருந்து, சிவபெருமானை வணங்கி பூஜித்தனர். அந்த நாளே ‘மகா சிவராத்திரி’ என்றும் மற்றொரு கதை சொல்கிறது.
* தேவர்களும் அசுரர்களும், அமிர்தம் பெறுவதற்காக பாற்கடலைக் கடைந்தனர். அப்போது கடலில் இருந்து உலகையே அழிக்கும் நஞ்சு வெளிப்பட்டது. அந்த விஷத்தை அருந்தி, உலக உயிர்களை சிவபெருமான் காத்தார். அந்த நாளே பிரதோஷம் ஆகும். ஆனால் அமிர்தம் கிடைப்பதற்காக தேவர்கள் பாற்கடலைக் கடைய வேண்டியதிருந்ததால், அமிர்தம் கிடைத்த பிறகான ஒரு நாளில், விஷத்தில் இருந்து உயிர்களைக் காத்த இறைவனுக்கு, அவர்கள் நன்றி தெரிவித்தனர். ஒரு நாள் இரவு முழுவதும் கண் விழித்திருந்து, சிவபெருமானை வணங்கி பூஜித்தனர். அந்த நாளே ‘மகா சிவராத்திரி’ என்றும் மற்றொரு கதை சொல்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X