என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் மாசி மகத் திருவிழா
Byமாலை மலர்20 Feb 2019 4:22 AM GMT (Updated: 20 Feb 2019 4:22 AM GMT)
கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் மாசி மகத் திருவிழா நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற குடவறை கோவிலான கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் மாசி மகத் திருவிழா நேற்று நடந்தது. இதனை முன்னிட்டு, அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, திருவனந்தல், காலசந்தி பூஜை நடந்தது.
விழாவையொட்டி ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சிவகாசி, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கார், வேன், பஸ்களில் நேற்று முன்தினம் கோவிலுக்கு வந்தனர். அவர்கள் அங்குள்ள மண்டபங்களில் தங்கியிருந்து வழிபட்டனர். காலையில் மண்டபங்களில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்தும், பல்வேறு அடி நீள அலகு குத்தியும், கிரிப்பிரகாரம் வழியாக கோவிலுக்கு வந்து வழிபட்டனர்.
மதியம் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், உச்சிகால பூஜை நடந்தது. இரவில் கழுகாசலமூர்த்தி மயில் வாகனத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவையொட்டி ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சிவகாசி, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கார், வேன், பஸ்களில் நேற்று முன்தினம் கோவிலுக்கு வந்தனர். அவர்கள் அங்குள்ள மண்டபங்களில் தங்கியிருந்து வழிபட்டனர். காலையில் மண்டபங்களில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்தும், பல்வேறு அடி நீள அலகு குத்தியும், கிரிப்பிரகாரம் வழியாக கோவிலுக்கு வந்து வழிபட்டனர்.
மதியம் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், உச்சிகால பூஜை நடந்தது. இரவில் கழுகாசலமூர்த்தி மயில் வாகனத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X