என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கருட வாகனத்தில் எழுந்தருளிய பெருமாள் சுவாமிகள் ஊர்வலமாக சென்ற போது எடுத்த படம்.
    X
    கருட வாகனத்தில் எழுந்தருளிய பெருமாள் சுவாமிகள் ஊர்வலமாக சென்ற போது எடுத்த படம்.

    ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவிலில் கருட சேவை

    பிரசித்தி பெற்ற ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி கோவிலில் கருட சேவை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    ஸ்ரீமுஷ்ணத்தில் பிரசித்தி பெற்ற பூவராகசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் மாசிமக திருவிழா கடந்த 11-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் 3-ம் நாள் திருவிழாவான நேற்று முன்தினம் தங்க கருட சேவை உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு அபிஷேக, ஆராதனை நடத்தப்பட்டு தங்க கருட வாகனத்தில் யக்ஞவராகன் சுவாமி எழுந்தருளினார். இதையடுத்து முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து கோவிலை சென்றடைந்தார்.

    இதை தொடர்ந்து சாத்தியம், எரப்பாவூர், பெ.பூவனூர், வண்ணாங்குடிகாடு, வலசக்காடு, எசனூர் ஆகிய ஊர்களில் உள்ள வரதராஜ பெருமாள், திருப்பயர் பட்டாபி ராமபெருமாள், கோவிலூர், க.இளமங்கலம் ராதா கிருஷ்ண பெருமாள், பெரம்பலூர், ரெட்டிக்குப்பம், கோ.பவழங்குடி சீனிவாச பெருமாள், மேமாத்தூர், கோமங்கலம், ஆண்டிமடம், அணிக்குதிச்சான், கோபாலபுரம் லட்சுமி நாராயண பெருமாள், கோ.மங்கலம் பிரசன்ன வெங்கடேச பெருமாள், தேவஸ்தான கோபுராபுரம் ஆதி நாராயண பெருமாள், ஸ்ரீநெடுஞ்சேரி வேணுகோபால பெருமாள், மன்னம்பாடி வேணுகோபால் பெருமாள், விருத்தாசலம் பெரியார் நகர் ராஜகோபால சுவாமி ஆகிய 22 சுவாமிகள் கருட வாகனத்தில் எழுந்தருளினர்.

    இதையடுத்து ஸ்ரீமுஷ்ணம் கடைவீதி காமராஜர் சிலை அருகில் உள்ள பஜனை மடத்தில் இருந்து ஊர்வலம் தொடங்கி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் வருகிற 19-ந்தேதி கிள்ளை கடற்கரையில் தீர்த்தவாரி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறையினர், கோவில் அர்ச்சகர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×