search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நித்திய கல்யாணப்பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது
    X

    நித்திய கல்யாணப்பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது

    காரைக்கால் நித்திய கல்யாணப்பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    காரைக்காலில் உள்ள பிரசித்திபெற்ற நித்திய கல்யாணப்பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் நேற்று காலை நித்திய கல்யாணப் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகத்துடன் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு கொடிகம்பம் அருகில் எழுந்தருளினார். பின்னர் கொடியேற்றம் நடைபெற்றது.

    விழாவில் கைலாசநாதர் கோவில் அறங்காவல் குழு தலைவர் கேசவன், துணைத்தலைவர் ஆறுமுகம், செயலாளர் பக்கிரிசாமி, பொருளாளர் ரஞ்சன் கார்த்திகேயன், உறுப்பினர் பிரகாஷ், முன்னாள் தனி அதிகாரி ஆசைதம்பி, முன்னாள் தலைவர் தண்டாயுதபாணி மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவில் நேற்று மாலை 6.30 மணிக்கு சூரிய பிரபை வீதி உலா நடைபெற்றது. பிரம்மோற்சவ விழா நாட்களில் சந்திரபிரபா, சேஷ, கருட, அனுமன், யானை உள்ளிட்ட வாகனங்களில் பெருமாளின் வீதிஉலா நடக்கிறது.

    விழாவில் வருகிற 15-ந் தேதி திருக்கல்யாணம், 17-ந் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. 19-ந் தேதி பெருமாள் பல்லக்கில் ஊர்வலமாக சென்று திரு-பட்டினத்தில் நடைபெறும் மாசிமகத்தில் கலந்து கொள்கிறார். 21-ந்தேதி தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவல் குழுவினர் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×