search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சிங்கிரி கோவிலுக்கு புனித பாதயாத்திரை 6-ந்தேதி நடக்கிறது
    X

    சிங்கிரி கோவிலுக்கு புனித பாதயாத்திரை 6-ந்தேதி நடக்கிறது

    ஸ்ரீ லட்சுமி நரசிம்ம பெருமாள் ஆன்மிக வழிபாட்டு மன்றம் சார்பில் சிங்கிரி கோவிலுக்கு புனித பாதயாத்திரை வருகிற 6-ந் தேதி (ஞாயிற்று கிழமை)நடக்கிறது.
    ஸ்ரீ லட்சுமி நரசிம்ம பெருமாள் ஆன்மிக வழிபாட்டு மன்றம் சார்பில் சிங்கிரி கோவிலுக்கு புனித பாதயாத்திரை வருகிற 6-ந் தேதி (ஞாயிற்று கிழமை)நடக்கிறது. இது குறித்து புதுச்சேரி ஸ்ரீ லட்சுமி நரசிம்ம பெருமாள் ஆன்மிக வழிபாட்டு மன்ற தலைவர் இளங்கோ நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    புதுச்சேரி ஸ்ரீ லட்சுமி நரசிம்ம பெருமாள் ஆன்மிக வழிபாட்டு மன்றம் சார்பில் உலக நன்மைக்காக ஆண்டுதோறும் ஜனவரி முதல் ஞாயிற்றுக்கிழமையில் சிங்கிரி கோவிலுக்கு பாதயாத்திரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் 23-வது ஆண்டு புனித பாதயாத்திரை வருகிற 6-ந் தேதி நடைபெற உள்ளது.

    புதுச்சேரி வரதராஜ பெருமாள் கோவிலில் காலை 6 மணிக்கு தொடங்கும் இந்த பாதயாத்திரையை திருக்கோவிலூர் ஸ்ரீமத் எம்பெருமானார் ஜீயர் சுவாமிகளின் மங்களாசாசனம் செய்து தொடங்கி வைக்கிறார். இதில் திவ்யநாமபஜனை, பிருந்தாவன பஜனைகள் மற்றும் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம பெருமாளுக்கு விசேஷ திருமஞ்சனமும் நடைபெறும்

    இந்த பாதயாத்திரை புதுவை-கடலூர் சாலை வழியாக அபிஷேகப்பாக்கம் சிங்கிரி கோவிலில் நிறைவு பெறும். புனித பாதயாத்திரையையொட்டி காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை பக்தர் களுக்கு அன்னதானம் வழங்கப்படும். விழாவையொட்டி 5-ந் தேதி(சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு வைசியாள் வீதியில் உள்ள வாசவி திருமண நிலையத்தில் திருமங்கை ஆழ்வார் வைபவம் என்ற தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மன்ற நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×