என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
குற்றாலநாத சுவாமி கோவிலில் திருவாதிரை திருவிழா தேரோட்டம்
Byமாலை மலர்19 Dec 2018 5:28 AM GMT (Updated: 19 Dec 2018 5:28 AM GMT)
நெல்லை மாவட்டம் குற்றாலம் குற்றால நாத சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் திருவாதிரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது.
நெல்லை மாவட்டம் குற்றாலம் குற்றால நாத சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் திருவாதிரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் சிறப்பு பூஜைகள், வீதிஉலா ஆகியவை நடைபெற்றது. திருவிழாவின் 5-ம் நாளான நேற்று காலை தேரோட்டம் நடைபெற்றது.
காலை 8.30 மணிக்கு விநாயகர் தேர், முருகன் தேர் ஆகியவை வடம் பிடித்து இழுக்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து நடராஜர் தேர் குற்றால நாத சுவாமி, குழல்வாய் மொழியம்மை தேர் ஆகிவையும் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. இதில் குற்றாலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
விழாவில் வருகிற 21-ந் தேதி (வெள்ளிக்கிழமை) சித்திரை சபையில் காலை 10 மணிக்கு பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடக்கிறது.
23-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு சித்திரை சபையில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனையும், காலை 5 மணிக்கு திரிகூட மண்டபத்தில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனையும் நடக்கிறது.
இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் சிறப்பு பூஜைகள், வீதிஉலா ஆகியவை நடைபெற்றது. திருவிழாவின் 5-ம் நாளான நேற்று காலை தேரோட்டம் நடைபெற்றது.
காலை 8.30 மணிக்கு விநாயகர் தேர், முருகன் தேர் ஆகியவை வடம் பிடித்து இழுக்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து நடராஜர் தேர் குற்றால நாத சுவாமி, குழல்வாய் மொழியம்மை தேர் ஆகிவையும் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. இதில் குற்றாலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
விழாவில் வருகிற 21-ந் தேதி (வெள்ளிக்கிழமை) சித்திரை சபையில் காலை 10 மணிக்கு பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடக்கிறது.
23-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு சித்திரை சபையில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனையும், காலை 5 மணிக்கு திரிகூட மண்டபத்தில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனையும் நடக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X