search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    விளக்கேற்றிய பிறகு செய்யக் கூடாதவை
    X

    விளக்கேற்றிய பிறகு செய்யக் கூடாதவை

    விளக்கு எரியத் தொடங்கியவுடன் அந்த தீபத்துக்குள் சூரிய தேவதை ஆவாஹனமாகி விடுவாள். விளக்கேற்றிய பிறகு சில விஷயங்களை கண்டிப்பாக செய்யக்கூடாது. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    * விளக்கேற்றிய பிறகு தலை சீவக் கூடாது.
    * விளக்கேற்றிய பிறகு கூட்டக் கூடாது.
    * விளக்கேற்றிய உடன் சுமங்கலிப் பெண் வெளியே செல்லக் கூடாது.
    * விளக்கேற்றிய உடன் சாப்பிடக் கூடாது.

    * விளக்கேற்றும் நேரத்தில் உறங்க கூடாது.
    * விளக்கேற்றிய பிறகு பால், மோர், உப்பு, தவிடு, சுண்ணாம்பு, அரிசி, கடன் ஆகியவை கொடுக்கக் கூடாது.

    * விளக்கேற்றியவுடன் துணி துவைக்கக் கூடாது.
    * விளக்கேற்றி விட்டு உடன் தலை குளிக்கக் கூடாது.
    * வீட்டுக்கு தூரமான பெண்கள் மூன்று நாள்களும் விளக்கை ஏற்றவோ, தொடவோ கூடாது.

    Next Story
    ×