என் மலர்
ஆன்மிகம்

ஆலயத்தில் பிரகாரம் வலம் வரும் முறை
பொதுவாகக் கோவில்களுக்குச் சென்றால் பிரகாரம் (வலம்) வருவது வழக்கம். ஆனால் பிரகாரம் வலம் வரும் போது சிலவழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
பொதுவாகக் கோவில்களுக்குச் சென்றால் பிரகாரம் (வலம்) வருவது வழக்கம். அதை ஒற்றைப் படையில் சுற்றுவதா? இரட்டைப் படையில் சுற்றுவதா? என்பது சிலரது கேள்வியாக இருக்கும்.
விநாயகருக்கு ஒரு சுற்று பிரகாரம் சுற்ற வேண்டும்.
சிவனுக்கு மூன்று சுற்று சுற்ற வேண்டும்.
விஷ்ணுவிற்கு நான்கு சுற்று.
நவக்கிரகத்திற்கு ஒன்பது சுற்று சுற்றுவது நல்லது.
பிரகாரம் வரும்பொழுது, பிறர் கதைகளையோ, வீட்டுக் கதைகளையோ பேசாமல், தெய்வ நம்பிக்கையோடு வரம் தரும் தெய்வப் பாடல்களையோ, சுலோகங்களையோ உச்சரித்தபடி பிரகாரம் சுற்றினால் பெரும் பாக்கியம் கிடைக்கும். பிறர் போற்றும் அளவிற்கு வாழ்க்கைப் பாதையும் அமையும்.
சிவாலயத்தை வலம் வரும்போது ‘சிவாயநம’ என்று உச்சரிக்கலாம்.
விஷ்ணு ஆலயத்தை வலம் வரும் பொழுது ‘ஓம் நமோ நாராயணாய நமஹ’ என்று உச்சரிக்கலாம். ஏராளமான முறை இறைவன் நாமத்தை உச்சரித்தால் தாராளமாகத் தனவரவு வந்துசேரும்.
விநாயகருக்கு ஒரு சுற்று பிரகாரம் சுற்ற வேண்டும்.
சிவனுக்கு மூன்று சுற்று சுற்ற வேண்டும்.
விஷ்ணுவிற்கு நான்கு சுற்று.
நவக்கிரகத்திற்கு ஒன்பது சுற்று சுற்றுவது நல்லது.
பிரகாரம் வரும்பொழுது, பிறர் கதைகளையோ, வீட்டுக் கதைகளையோ பேசாமல், தெய்வ நம்பிக்கையோடு வரம் தரும் தெய்வப் பாடல்களையோ, சுலோகங்களையோ உச்சரித்தபடி பிரகாரம் சுற்றினால் பெரும் பாக்கியம் கிடைக்கும். பிறர் போற்றும் அளவிற்கு வாழ்க்கைப் பாதையும் அமையும்.
சிவாலயத்தை வலம் வரும்போது ‘சிவாயநம’ என்று உச்சரிக்கலாம்.
விஷ்ணு ஆலயத்தை வலம் வரும் பொழுது ‘ஓம் நமோ நாராயணாய நமஹ’ என்று உச்சரிக்கலாம். ஏராளமான முறை இறைவன் நாமத்தை உச்சரித்தால் தாராளமாகத் தனவரவு வந்துசேரும்.
Next Story






