என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
தாமிரபரணி புஷ்கர விழா: எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலையில் கொடியேற்றம்
Byமாலை மலர்10 Oct 2018 5:37 AM GMT (Updated: 10 Oct 2018 5:37 AM GMT)
நெல்லை எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலையில் நேற்று தாமிரபரணி புஷ்கர விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தாமிரபரணி மகா புஷ்கர விழா நாளை (வியாழக்கிழமை) தொடங்கி 23-ந் தேதி வரை தாமிரபரணி ஆற்றில் உள்ள படித்துறைகளில் நடக்கிறது. நெல்லை அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலை சார்பில் தாமிரபரணி மகா புஷ்கர விழா நடத்தப்படுகிறது. இந்த புஷ்கர விழா எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலைக்கு எதிரே அமைக்கப்பட்டு உள்ள யாகசாலையில் நேற்று காலை 6 மணிக்கு தசமகா வித்யா யாகம், கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.
இதைத்தொடர்ந்து 7 மணிக்கு தாமிரபரணி புஷ்கர விழா கொடியேற்றம் நடந்தது. பின்னர் நவக்கிரக ஹோமம், சுதர்சன ஹோமம், லட்சுமி ஹோமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் வரதராஜ சுவாமிகள், அன்னை ராமலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இன்று (புதன்கிழமை) காலை 9 மணிக்கு மகாகாளி யாகம் நடக்கிறது. நாளை (வியாழக்கிழமை) காலை 6 மணிக்கு எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலை சார்பில் ஜடாயுத்துறையில் புதிதாக கருங்கல்லால் அமைக்கப்பட்டுள்ள படித்துறையில் சிறப்பு யாக பூஜை நடக்கிறது. 9 மணிக்கு புதிய படித்துறையில் ஓம்கார நந்தா சுவாமிகள், புனித நீர் ஊற்றி பிரதிஷ்டை பூஜையை நடத்துகிறார்.
அன்னை ராமலட்சுமி தேவி, படித்துறையை மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கிறார். காலை 10 மணிக்கு சுவாமி தீர்த்தவாரி நடக்கிறது. மாலை 5.30 மணிக்கு கோசாலையில் நடக்கும் யாகசாலை பூஜையில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொள்கிறார். இதைத்தொடர்ந்து அவர் மகாஆராத்தியை எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலை ஜடாயு படித்துறையில் தொடங்கி வைக்கிறார். தாமிரபரணி புஷ்கர விழாவையொட்டி எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலையில் தினமும் பல்வேறு பூஜைகள் நடக்கிறது.
இதைத்தொடர்ந்து 7 மணிக்கு தாமிரபரணி புஷ்கர விழா கொடியேற்றம் நடந்தது. பின்னர் நவக்கிரக ஹோமம், சுதர்சன ஹோமம், லட்சுமி ஹோமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் வரதராஜ சுவாமிகள், அன்னை ராமலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இன்று (புதன்கிழமை) காலை 9 மணிக்கு மகாகாளி யாகம் நடக்கிறது. நாளை (வியாழக்கிழமை) காலை 6 மணிக்கு எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலை சார்பில் ஜடாயுத்துறையில் புதிதாக கருங்கல்லால் அமைக்கப்பட்டுள்ள படித்துறையில் சிறப்பு யாக பூஜை நடக்கிறது. 9 மணிக்கு புதிய படித்துறையில் ஓம்கார நந்தா சுவாமிகள், புனித நீர் ஊற்றி பிரதிஷ்டை பூஜையை நடத்துகிறார்.
அன்னை ராமலட்சுமி தேவி, படித்துறையை மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கிறார். காலை 10 மணிக்கு சுவாமி தீர்த்தவாரி நடக்கிறது. மாலை 5.30 மணிக்கு கோசாலையில் நடக்கும் யாகசாலை பூஜையில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொள்கிறார். இதைத்தொடர்ந்து அவர் மகாஆராத்தியை எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலை ஜடாயு படித்துறையில் தொடங்கி வைக்கிறார். தாமிரபரணி புஷ்கர விழாவையொட்டி எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலையில் தினமும் பல்வேறு பூஜைகள் நடக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X