என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருப்பதியில் அங்குரார்ப்பணத்துடன் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் இன்று தொடக்கம்
Byமாலை மலர்11 Aug 2018 3:13 AM GMT (Updated: 11 Aug 2018 5:38 AM GMT)
திருப்பதியில் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் அங்குரார்ப் பணத்துடன் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. இதனையொட்டி 6 நாளில் 1 லட்சத்து 94 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்கு உலகம் முழுவதும் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தினமும் வருகின்றனர். பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் மகாசம்ப்ரோசணம் எனப்படும் கும்பாபிஷேகம் 12 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நடக்கிறது. கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் அங்குரார்ப்பணத்துடன் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. வருகிற 16-ந் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது.
இதனையொட்டி கோவில் வளாகத்தில் யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்துடன் தயார் நிலையில் உள்ளது. யாக குண்டங்களில் பயன்படுத்துவதற்காக டன் கணக்கில் நெய் டின்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கும்பாபிஷேகத்தின்போது குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி முதல் நாளான இன்று 50 ஆயிரம் பக்தர்களும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் பக்தர்களும், 13-ந் தேதி (திங்கட்கிழமை) 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் பக்தர்களும் அனுமதிக்கப்படுகின்றனர்.
அதேபோல் 14-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் வரை அனுமதிக்கப்படுவர் என தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் அனில்குமார்சிங்கால் தெரிவித்துள்ளார்.
6 நாட்களிலும் மொத்தம் 1 லட்சத்து 94 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனையொட்டி கோவில் வளாகத்தில் யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்துடன் தயார் நிலையில் உள்ளது. யாக குண்டங்களில் பயன்படுத்துவதற்காக டன் கணக்கில் நெய் டின்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கும்பாபிஷேகத்தின்போது குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி முதல் நாளான இன்று 50 ஆயிரம் பக்தர்களும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் பக்தர்களும், 13-ந் தேதி (திங்கட்கிழமை) 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் பக்தர்களும் அனுமதிக்கப்படுகின்றனர்.
அதேபோல் 14-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் வரை அனுமதிக்கப்படுவர் என தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் அனில்குமார்சிங்கால் தெரிவித்துள்ளார்.
6 நாட்களிலும் மொத்தம் 1 லட்சத்து 94 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X