என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் சிறப்பு பூஜைகள் இன்று தொடங்குகிறது
Byமாலை மலர்17 July 2018 5:06 AM GMT (Updated: 17 July 2018 5:06 AM GMT)
ஆடி மாதத்தையொட்டி சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் கற்கடக ஸ்ரீபலி விழா இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 16-ந் தேதி வரை நடக்கிறது..
பிரசித்திபெற்ற சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தையொட்டி சிறப்பு பூஜையாக கற்கடக ஸ்ரீபலி விழா நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டுக்கான கற்கடக ஸ்ரீபலி விழா இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 16-ந் தேதி வரை நடக்கிறது..
இன்று முதல் ஆடி மாதம் முழுவதும் காலையில் தாணுமாலயசாமிக்கு சிறப்பு அபிஷேகம், ருத்ர ஜெபத்துடன் மகாதாரை அஷ்டாபிஷேகம், நண்பகல் 11 மணிக்கு தீபாராதனை போன்றவை நடைபெறுகிறது.
இதைப்போன்று இன்று முதல் 29-ந் தேதி வரை ஆடிமாத களபாபிஷேகம் நடைபெறுகிறது. களப அபிஷேகத்தையொட்டி விஷ்ணுவுக்கும், தாணுமாலயசாமிக்கும் தினந்தோறும் நடைபெறும் நித்யகாரிய பூஜைகளுக்கு பின்பு தங்கக் குடத்தில் சந்தனம், களபம் மற்றும் நறுமணப்பொருட்கள் அடங்கிய களப அபிஷேகம் நடைபெறுகிறது.
29-ந் தேதி உதய அஸ்தமன பூஜை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் இணை ஆணையர் அன்புமணி தலைமையில் திருக்கோவில் நிர்வாகத்தினரும், பக்தர்களும் இணைந்து செய்து வருகின்றனர்.
இன்று முதல் ஆடி மாதம் முழுவதும் காலையில் தாணுமாலயசாமிக்கு சிறப்பு அபிஷேகம், ருத்ர ஜெபத்துடன் மகாதாரை அஷ்டாபிஷேகம், நண்பகல் 11 மணிக்கு தீபாராதனை போன்றவை நடைபெறுகிறது.
இதைப்போன்று இன்று முதல் 29-ந் தேதி வரை ஆடிமாத களபாபிஷேகம் நடைபெறுகிறது. களப அபிஷேகத்தையொட்டி விஷ்ணுவுக்கும், தாணுமாலயசாமிக்கும் தினந்தோறும் நடைபெறும் நித்யகாரிய பூஜைகளுக்கு பின்பு தங்கக் குடத்தில் சந்தனம், களபம் மற்றும் நறுமணப்பொருட்கள் அடங்கிய களப அபிஷேகம் நடைபெறுகிறது.
29-ந் தேதி உதய அஸ்தமன பூஜை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் இணை ஆணையர் அன்புமணி தலைமையில் திருக்கோவில் நிர்வாகத்தினரும், பக்தர்களும் இணைந்து செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X