என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
Byமாலை மலர்3 July 2018 3:35 AM GMT (Updated: 3 July 2018 3:35 AM GMT)
எலவத்தடி பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பண்ருட்டி அருகே உள்ள எலவத்தடி கிராமத்தில் பத்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த அப்பகுதி மக்கள் முடிவு செய்தனர். அதன்படி பத்ரகாளியம்மன் கோவில் மற்றும் விநாயகர், முருகன், தட்சணாமூர்த்தி, பரிவார மூர்த்திகள் சன்னதிகளில் புனரமைப்பு பணிகள் நடந்து முடிந்த நிலையில் கும்பாபிஷேக விழா கடந்த 28-ந்தேதி கணபதி பூஜையுடன் தொடங்கியது.
இதை தொடர்ந்து தினசரி யாக சாலை பூஜை நடைபெற்று வந்தது. கும்பாபிஷேக நாளான நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு 4-ம் கால யாக சாலை பூஜை, விநாயகர் பூஜை, வருண பூஜை நடந்தது. தொடர்ந்து 9.30 மணிக்கு யாகசாலையில் இருந்து புனிதநீர் அடங்கிய கலசங்கள் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் பின்னர் பத்ரகாளியம்மன் கோவில் விமான கலசத்தின் மீது புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதையடுத்து அங்கு திரண்டிருந்த பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. இதில் எலவத்தடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை பெரியகொரமத்தி படையாட்சி வகையறாக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
இதை தொடர்ந்து தினசரி யாக சாலை பூஜை நடைபெற்று வந்தது. கும்பாபிஷேக நாளான நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு 4-ம் கால யாக சாலை பூஜை, விநாயகர் பூஜை, வருண பூஜை நடந்தது. தொடர்ந்து 9.30 மணிக்கு யாகசாலையில் இருந்து புனிதநீர் அடங்கிய கலசங்கள் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் பின்னர் பத்ரகாளியம்மன் கோவில் விமான கலசத்தின் மீது புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதையடுத்து அங்கு திரண்டிருந்த பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. இதில் எலவத்தடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை பெரியகொரமத்தி படையாட்சி வகையறாக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X