search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் ஆனி கொடை விழா கால் நாட்டுதலுடன் தொடங்கியதை படத்தில் காணலாம்.
    X
    குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் ஆனி கொடை விழா கால் நாட்டுதலுடன் தொடங்கியதை படத்தில் காணலாம்.

    குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் ஆனி கொடை விழா

    குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் ஆனி கொடை விழா கால் நாட்டுதலுடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் கடைசி செவ்வாய்க்கிழமை கொடை விழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு கோவிலில் ஆனி கொடை விழா வருகிற 10-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதையொட்டி கோவிலில் கால்நாட்டு விழா நேற்று நடந்தது. அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, நித்யல் பூஜை நடந்தது.

    மதியம் சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் விநாயகர், அம்மன், நாராயணர், பெரியசாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு புஷ்ப அலங்காரம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பெரியசாமி சன்னதிக்கு மேல்புறம் உள்ள முப்பிடாதி அம்மன் கோவில் முன்பு மஞ்சள், குங்குமம், சந்தனம், மாவிலை, புஷ்ப அலங்காரத்துடன் கூடிய காலை குரங்கணி 60 பங்கு நாடார்கள் நட்டினர். தொடர்ந்து திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    கொடை விழா தொடங்கியதும் பக்தர்கள் விரதத்தை தொடங்கினர். 
    Next Story
    ×