என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
சமயபுரத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
Byமாலை மலர்23 Jun 2018 5:27 AM GMT (Updated: 23 Jun 2018 5:27 AM GMT)
சமயபுரத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அங்காள பரமேஸ்வரி அம்மன் இக்கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு முடிவுற்றதை தொடர்ந்து கும்பாபிஷேகம் நடைபெற்றது.
சமயபுரத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு முடிவுற்றதை தொடர்ந்து நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதையொட்டி கடந்த 19-ந் தேதி கணபதி ஹோமம், துர்கா, லெட்சுமி, சரஸ்வதி ஹோமம், நவக்கிரக ஹோமம், அனுக்ஞை, விக்னேஸ்வரர் பூஜை, புண்ணியாக வாசனம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, அங்குரார்பணம், ரக்ஷாபந்தனம், கும்ப அலங்காரம் உள்ளிட்ட முதல் கால யாக பூஜைகள் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து இரண்டாம் கால, மூன்றாம் கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றன.
நேற்று காலை நான்காம் கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து விமானகலசம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும், மூலவர் அங்காளம்மனுக்கும், மாரியம்மன் கோவிலின் குருவாயூரப்ப குருக்கள் தலைமையில் அரவிந்த் குருக்கள் உள்பட 23 பேர் புனித நீரூற்றி கும்பாபிஷேகம் செய்தனர். பின்னர் மகா தீபாராதனை காட்டப்பட்டது.
விழாவில் சமயபுரம் மற்றும் திருச்சி, நாமக்கல், கோயம்புத்தூர், திருப்பூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை பரம்பரை பூஜகர் சிவகுமார், சுவாமிநாதன் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு பணியில் சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானவேலன் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் அகிலன் மற்றும் போலீசார் ஈடுபட்டனர்.
இதையொட்டி கடந்த 19-ந் தேதி கணபதி ஹோமம், துர்கா, லெட்சுமி, சரஸ்வதி ஹோமம், நவக்கிரக ஹோமம், அனுக்ஞை, விக்னேஸ்வரர் பூஜை, புண்ணியாக வாசனம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, அங்குரார்பணம், ரக்ஷாபந்தனம், கும்ப அலங்காரம் உள்ளிட்ட முதல் கால யாக பூஜைகள் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து இரண்டாம் கால, மூன்றாம் கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றன.
நேற்று காலை நான்காம் கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து விமானகலசம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும், மூலவர் அங்காளம்மனுக்கும், மாரியம்மன் கோவிலின் குருவாயூரப்ப குருக்கள் தலைமையில் அரவிந்த் குருக்கள் உள்பட 23 பேர் புனித நீரூற்றி கும்பாபிஷேகம் செய்தனர். பின்னர் மகா தீபாராதனை காட்டப்பட்டது.
விழாவில் சமயபுரம் மற்றும் திருச்சி, நாமக்கல், கோயம்புத்தூர், திருப்பூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை பரம்பரை பூஜகர் சிவகுமார், சுவாமிநாதன் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு பணியில் சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானவேலன் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் அகிலன் மற்றும் போலீசார் ஈடுபட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X