என் மலர்
ஆன்மிகம்

அந்தியூர் குருநாதசாமி கோவிலில் இன்று தேர்த்திருவிழா
அந்தியூர் குருநாதசாமி கோவிலில் இன்று தேர்திருவிழா நடைபெற்றது. 60 அடி உயர மகாமேறு தேர்களில் முதல் தேரில் குருநாதசாமியும், மற்றொரு தேரில் பெருமாள் சாமியும் சென்றன.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கோவில்களில் ஓன்று அந்தியூர் புதுப்பாளையத்தில் உள்ள புகழ்மிக்க குருநாதசாமி கோவில் ஆகும்.
இக்கோவிலில் ஆடி மாதத் தில் தேர்த்திருவிழா வெகு சிறப்பாக நடக்கும். அதே போல் இந்த ஆண்டிற்கான தேர்த்திருவிழா 19-ந்தேதி பூச்சாட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
விழாவையொட்டி கோவிலில் முறைப்படி சிறப்பு பூஜை நடத்தப்பட்டு கடந்த வாரம் புதன்கிழமை 26-ந்தேதி கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு குருநாதசாமியை வழிபட்டு சென்றனர். சிறப்பு அலங்காத்தில் குருநாதசாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவையொட்டி முக்கியமான நிகழ்ச்சியாக வன பூஜை நடத்தப்படும். இதில் முதல் வனபூஜை 2-ந் தேதி நடைபெற்றது. இதனை அடுத்து பக்தர்கள் பெரிய குடை தீர்த்தம் என்னும் புதுப்பாளையத்தின் கடைசி தீர்த்தம், பவானி கூடுதுறையில் இருந்து புனிதநீர் (தீர்த்த குடம்) எடுத்து வந்து அந்தியூர் பத்திர காளியம்மன் கோவிலிலிருந்து வனக்கோவிலுக்கு பக்தர்கள் எடுத்து வந்தனர்.
வனக்கோவிலில் குருநாதசாமி காமாச்சியம்மன் மற்றும் பெருமாள் சாமிக்கு விசேச பூஜைகளும் நடைபெற்று இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இன்று 9-ந்தேதி தேர்திருவிழா நடைபெற்றது. 60 அடி உயர மகாமேறு தேர்களில் முதல் தேரில் குருநாதசாமியும், மற்றொரு தேரில் பெருமாள் சாமியும் சென்றன. ஒரு சப்பர தேரில் காமாட்சி அம்மன் சிலை எடுத்து செல்லப்பட்டது. தேர்களை பக்தர்கள் தங்கள் தோள்களில் சுமந்து சென்றது குறிப்பிடத்தக்கது.
இக்கோவிலில் ஆடி மாதத் தில் தேர்த்திருவிழா வெகு சிறப்பாக நடக்கும். அதே போல் இந்த ஆண்டிற்கான தேர்த்திருவிழா 19-ந்தேதி பூச்சாட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
விழாவையொட்டி கோவிலில் முறைப்படி சிறப்பு பூஜை நடத்தப்பட்டு கடந்த வாரம் புதன்கிழமை 26-ந்தேதி கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு குருநாதசாமியை வழிபட்டு சென்றனர். சிறப்பு அலங்காத்தில் குருநாதசாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவையொட்டி முக்கியமான நிகழ்ச்சியாக வன பூஜை நடத்தப்படும். இதில் முதல் வனபூஜை 2-ந் தேதி நடைபெற்றது. இதனை அடுத்து பக்தர்கள் பெரிய குடை தீர்த்தம் என்னும் புதுப்பாளையத்தின் கடைசி தீர்த்தம், பவானி கூடுதுறையில் இருந்து புனிதநீர் (தீர்த்த குடம்) எடுத்து வந்து அந்தியூர் பத்திர காளியம்மன் கோவிலிலிருந்து வனக்கோவிலுக்கு பக்தர்கள் எடுத்து வந்தனர்.
வனக்கோவிலில் குருநாதசாமி காமாச்சியம்மன் மற்றும் பெருமாள் சாமிக்கு விசேச பூஜைகளும் நடைபெற்று இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இன்று 9-ந்தேதி தேர்திருவிழா நடைபெற்றது. 60 அடி உயர மகாமேறு தேர்களில் முதல் தேரில் குருநாதசாமியும், மற்றொரு தேரில் பெருமாள் சாமியும் சென்றன. ஒரு சப்பர தேரில் காமாட்சி அம்மன் சிலை எடுத்து செல்லப்பட்டது. தேர்களை பக்தர்கள் தங்கள் தோள்களில் சுமந்து சென்றது குறிப்பிடத்தக்கது.
Next Story






