என் மலர்
ஆன்மிகம்

சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் அழகிரிநாத பெருமாள் சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளியபோது எடுத்த படம்.
சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு
வைகுண்ட ஏகாதசியையொட்டி சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
பெருமாள் கோவில்களில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்று வைகுண்ட ஏகாதசி விழாவாகும். ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தில் நடக்கும் இந்த உற்சவம் 20 நாட்கள் நடைபெறும். இந்த விழாவில் முக்கியமான நிகழ்ச்சியாக மார்கழி மாத வளர்பிறை ஏகாதசி திதி அன்று “சொர்க்கவாசல்” என்று அழைக்கப்படும் பரமபத வாசல் திறக்கப்படும்.
இந்த சொர்க்கவாசல் வழியே அன்றைய தினம் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். சேலம் மாநகரில் கோட்டை பெருமாள் கோவில் உள்பட அனைத்து பெருமாள் கோவில்களிலும் நேற்று அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு உற்சவம் விமரிசையாக நடைபெற்றது.
சேலத்தில் பழமை வாய்ந்த சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி உற்சவம் கடந்த மாதம் 28-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்க வாசல் திறப்பு நேற்று அதிகாலை நடைபெற்றது. சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிக்காக அழகிரிநாதசுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டன.
தொடர்ந்து திருப்பாவை பாடல்கள் பாடப்பட்டு விசேஷ பூஜைகள் நடந்தன. சரியாக அதிகாலை 5.10 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. ஸ்ரீதேவி, பூதேவி சமேதரராக அழகிரிநாத பெருமாள் “பரமபத வாசல்”என்றழைக்கப்படும் சொர்க்க வாசல் வழியாக அழைத்து வரப்பட்டார். அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் “கோவிந்தா... கோவிந்தா” என பக்தி பரவசத்துடன் கோஷம் எழுப்பினார்கள்.
சொர்க்கவாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்த பெருமாள், கோவிலின் கிழக்கு வாசல் வழியாக மீண்டும் கோவிலுக்குள் சென்று உற்சவ மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
விழாவை முன்னிட்டு கண்ணாடி மாளிகையில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. மேலும் கோவிலில் மூலவர் அழகிரிநாதபெருமாள், சுந்தரவல்லி தாயார், ஆண்டாள், ஆஞ்சநேயர், கருடாழ்வார், கிருஷ்ணர், விஷ்ணுதுர்க்கை சன்னதிகளில் மூலவர்களுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு பூஜைகள் நடந்தன.
சொர்க்கவாசல் திறப்பை காண்பதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் நேற்று முன்தினம் இரவு முதலே கோவிலுக்கு வந்து காத்திருந்தனர். மேலும் பெருமாளை தரிசிப்பதற்காக பக்தர்கள் நேற்று காலை முதல் இரவு வரையிலும் கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர். சேலம் மாநகரில் மட்டுமல்லாது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து குவிந்தனர். கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்ய தடுப்புக் கட்டைகள் அமைக்கப்பட்டிருந்தன. மாற்றுத்திறனாளிகளுக்கும், முதியவர்களுக்கும் சாமி தரிசனம் செய்துவிட்டு வருவதற்காக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி ஏற்பாடுகளை சுதர்சன பட்டாச்சாரியார் செய்திருந்தார். விழாவை முன்னிட்டு சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார் உத்தரவின்பேரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சம்பத், எம்.எல்.ஏ.க்கள் சக்திவேல், வெங்கடாசலம், மனோன்மணி, இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியை தொடர்ந்து கோவிலில் “இராப்பத்து” உற்சவமும் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த உற்சவத்தின்போது தினமும் இரவு 8 மணிக்கு பெருமாள் திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளல், திருமொழி வேதபாராயணம் சேவித்தலும் 8.30 மணிக்கு திருக்கொட்டாரத்தில் பக்தி உலாவுதல் உற்சவமும் நடைபெறுகிறது.
இதேபோல் சேலம் டவுன் பட்டைக்கோவிலில் நேற்று அதிகாலை 5.10 மணிக்கு வேதமந்திரங்கள் முழங்க சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சொர்க்கவாசல் வழியாக வந்த பெருமாளை தரிசித்தனர். மூலவருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.
பட்டைக்கோவில் அருகே உள்ள ஆஞ்சநேயர் சன்னதியில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன.
சேலம் செவ்வாய்ப்பேட்டை பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலில் அதிகாலை 5.10 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. விழாவையொட்டி மூலவருக்கு தங்க கவசம் அணிவித்தும், பிரகாரத்தில் சக்கரத்தாழ்வாருக்கும் தங்க கவசம் அணிவித்தும் சிறப்பு அலங்காரத்தில் பூஜைகள் நடந்தன. அங்கும் காலை முதல் மாலை வரை திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
அம்மாப்பேட்டை சிங்கமெத்தை சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு, பெருமாளை தரிசனம் செய்தனர். விழாவையொட்டி மூலவருக்கும், தாயாருக்கும் தங்க கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
செவ்வாய்ப்பேட்டை பாண்டுரங்கநாதர் கோவிலில் நேற்று அதிகாலையில் சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது. விழாவையொட்டி மூலவர், தாயாருக்கும், பிரகார சன்னதிகளில் உள்ள தெய்வங்களுக்கும் தங்ககவசம் அணிவிக்கப்பட்டு பூஜைகள் நடந்தன. உற்சவ மூர்த்திகளுக்கு முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
சேலம் 2-வது அக்ரஹாரம் லட்சுமி நாராயணசுவாமி கோவிலில் அதிகாலையில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியையொட்டி மூலவருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு பூஜைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் சாமியை தரிசனம் செய்தனர். சேலம் சின்ன திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் அதிகாலையில் சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெற்றது.
இதில் கன்னங்குறிச்சி, அஸ்தம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல பெரமனூர் வெங்கடேச பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு மூலவருக்கு தங்க கவசம் அணிவித்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
இதையொட்டி விநாயகர், ஆஞ்சநேயர் வெள்ளி கவசத்திலும், உற்சவர் பெருமாள் மற்றும் ஆண்டாள் சிறப்பு அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின்னர் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். பிருந்தாவன் ரோட்டில் உள்ள வெங்கடாசலபதி கோவில், மகேந்திரபுரியில் உள்ள அலமேலு மங்கை சமேத வெங்கடேச வரதராஜ பெருமாள் கோவில் உள்பட சேலத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் நேற்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது.
இந்த சொர்க்கவாசல் வழியே அன்றைய தினம் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். சேலம் மாநகரில் கோட்டை பெருமாள் கோவில் உள்பட அனைத்து பெருமாள் கோவில்களிலும் நேற்று அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு உற்சவம் விமரிசையாக நடைபெற்றது.
சேலத்தில் பழமை வாய்ந்த சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி உற்சவம் கடந்த மாதம் 28-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்க வாசல் திறப்பு நேற்று அதிகாலை நடைபெற்றது. சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிக்காக அழகிரிநாதசுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டன.
தொடர்ந்து திருப்பாவை பாடல்கள் பாடப்பட்டு விசேஷ பூஜைகள் நடந்தன. சரியாக அதிகாலை 5.10 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. ஸ்ரீதேவி, பூதேவி சமேதரராக அழகிரிநாத பெருமாள் “பரமபத வாசல்”என்றழைக்கப்படும் சொர்க்க வாசல் வழியாக அழைத்து வரப்பட்டார். அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் “கோவிந்தா... கோவிந்தா” என பக்தி பரவசத்துடன் கோஷம் எழுப்பினார்கள்.
சொர்க்கவாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்த பெருமாள், கோவிலின் கிழக்கு வாசல் வழியாக மீண்டும் கோவிலுக்குள் சென்று உற்சவ மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
விழாவை முன்னிட்டு கண்ணாடி மாளிகையில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. மேலும் கோவிலில் மூலவர் அழகிரிநாதபெருமாள், சுந்தரவல்லி தாயார், ஆண்டாள், ஆஞ்சநேயர், கருடாழ்வார், கிருஷ்ணர், விஷ்ணுதுர்க்கை சன்னதிகளில் மூலவர்களுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு பூஜைகள் நடந்தன.
சொர்க்கவாசல் திறப்பை காண்பதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் நேற்று முன்தினம் இரவு முதலே கோவிலுக்கு வந்து காத்திருந்தனர். மேலும் பெருமாளை தரிசிப்பதற்காக பக்தர்கள் நேற்று காலை முதல் இரவு வரையிலும் கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர். சேலம் மாநகரில் மட்டுமல்லாது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து குவிந்தனர். கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்ய தடுப்புக் கட்டைகள் அமைக்கப்பட்டிருந்தன. மாற்றுத்திறனாளிகளுக்கும், முதியவர்களுக்கும் சாமி தரிசனம் செய்துவிட்டு வருவதற்காக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி ஏற்பாடுகளை சுதர்சன பட்டாச்சாரியார் செய்திருந்தார். விழாவை முன்னிட்டு சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார் உத்தரவின்பேரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சம்பத், எம்.எல்.ஏ.க்கள் சக்திவேல், வெங்கடாசலம், மனோன்மணி, இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியை தொடர்ந்து கோவிலில் “இராப்பத்து” உற்சவமும் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த உற்சவத்தின்போது தினமும் இரவு 8 மணிக்கு பெருமாள் திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளல், திருமொழி வேதபாராயணம் சேவித்தலும் 8.30 மணிக்கு திருக்கொட்டாரத்தில் பக்தி உலாவுதல் உற்சவமும் நடைபெறுகிறது.
இதேபோல் சேலம் டவுன் பட்டைக்கோவிலில் நேற்று அதிகாலை 5.10 மணிக்கு வேதமந்திரங்கள் முழங்க சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சொர்க்கவாசல் வழியாக வந்த பெருமாளை தரிசித்தனர். மூலவருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.
பட்டைக்கோவில் அருகே உள்ள ஆஞ்சநேயர் சன்னதியில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன.
சேலம் செவ்வாய்ப்பேட்டை பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலில் அதிகாலை 5.10 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. விழாவையொட்டி மூலவருக்கு தங்க கவசம் அணிவித்தும், பிரகாரத்தில் சக்கரத்தாழ்வாருக்கும் தங்க கவசம் அணிவித்தும் சிறப்பு அலங்காரத்தில் பூஜைகள் நடந்தன. அங்கும் காலை முதல் மாலை வரை திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
அம்மாப்பேட்டை சிங்கமெத்தை சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு, பெருமாளை தரிசனம் செய்தனர். விழாவையொட்டி மூலவருக்கும், தாயாருக்கும் தங்க கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
செவ்வாய்ப்பேட்டை பாண்டுரங்கநாதர் கோவிலில் நேற்று அதிகாலையில் சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது. விழாவையொட்டி மூலவர், தாயாருக்கும், பிரகார சன்னதிகளில் உள்ள தெய்வங்களுக்கும் தங்ககவசம் அணிவிக்கப்பட்டு பூஜைகள் நடந்தன. உற்சவ மூர்த்திகளுக்கு முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
சேலம் 2-வது அக்ரஹாரம் லட்சுமி நாராயணசுவாமி கோவிலில் அதிகாலையில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியையொட்டி மூலவருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு பூஜைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் சாமியை தரிசனம் செய்தனர். சேலம் சின்ன திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் அதிகாலையில் சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெற்றது.
இதில் கன்னங்குறிச்சி, அஸ்தம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல பெரமனூர் வெங்கடேச பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு மூலவருக்கு தங்க கவசம் அணிவித்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
இதையொட்டி விநாயகர், ஆஞ்சநேயர் வெள்ளி கவசத்திலும், உற்சவர் பெருமாள் மற்றும் ஆண்டாள் சிறப்பு அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின்னர் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். பிருந்தாவன் ரோட்டில் உள்ள வெங்கடாசலபதி கோவில், மகேந்திரபுரியில் உள்ள அலமேலு மங்கை சமேத வெங்கடேச வரதராஜ பெருமாள் கோவில் உள்பட சேலத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் நேற்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது.
Next Story






