search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஆண்டாள்
    X
    ஆண்டாள்

    மார்கழி ஸ்பெஷல் தினமும் ஒரு திருப்பாவை பாடுவோம்: இன்று பாடல் - 29

    சிற்றஞ்சிறுகாலே வந்துனைச் சேவித்து, உன் எனத்தொடங்கும் திருப்பாவையையும் அதன் பொருளையும் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    சிற்றஞ்சிறுகாலே வந்துனைச் சேவித்து, உன் 
    பொற்றாமரையடியே போற்றும் பொருள்கேளாய் 
    பெற்றெம்மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்த நீ 
    குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது 
    இற்றைப்றை கொள்வானென்று காண் கோவிந்தா 
    எற்றைக்கு மேழேழ் பிறவிக்கும், உன் தன்னோடு 
    உற்றோமேயாவோம் உனக்கே நாமாட்செய்வோம் 
    மற்றைநம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.

    பொருள்: அதிகாலையில் வந்து, உனது பாதங்களைப் பணிந்து நிற்பதன் பயனைக் கேட்பாயாக. பசுக் கூட்டத்தை மேய்த்து உண்ணும் இடையர் குலத்தில் பிறந்த நீ, நாங்கள் உனக்கு செய்யும் திருப்பணிகளை ஏற்றுக் கொள்ளாமல் எங்களைக் கைவிடுவது முறையாகாது. 

    இன்று கொடுக்கப்படும் பறையை மட்டும் நீ ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கோரி நாங்கள் வரவில்லை. காலம் உள்ளவரை, ஏழேழு பிறவிகளுக்கும் உன்னோடு நாங்கள் இப்போது இருப்பதைப் போன்ற அதே அன்போடும், உறவோடும் இருக்க வேண்டும். உனக்கு மட்டுமே நாங்கள் அடிமைகளாக இருக்க வேண்டும். அதை மட்டுமே எங்களுக்கு அளித்து அருள் புரிவாயாக.
    Next Story
    ×