search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருப்பாவை
    X
    திருப்பாவை

    மார்கழி ஸ்பெஷல் தினமும் ஒரு திருப்பாவை பாடுவோம்: இன்று பாடல் - 21

    ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப எனத்தொடங்கும் திருப்பாவையையும், அதன் பொருளையும் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப 
    மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள் 
    ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய் 
    ஊற்ற முடையாய் பெரியாய் உலகினில் 
    தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய் 
    மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண் 
    ஆற்றாது வந்து உன்னடி பணியுமாப் போலே 
    போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்.

    பொருள்: வள்ளலைப் போல கேட்டதும் பாலைப் பொழியும் பெரும் பசுக் கூட்டத்தைக் கொண்ட நந்தகோபரின் திருமகனே, அடியவர்களைக் காக்கும் அக்கறை உடையவனே, பெருமைகளைக் கொண்டவனே. இந்த உலகின் நிலையான சுடர் ஒளியே. நீ உறக்கத்தை விட்டு எழுந்து வருவாயாக. உன்னிடம் போரிட்டு உனது வலிமைக்கு முன்பு நிற்க முடியாமல் தோற்றவரெல்லாம் உனது அடியாராக மாறி உன் அடி பணிந்து வந்து நிற்கிறார்கள்.

    அவர்களுக்கு உனது அடிகளைப் பற்றிப் பணிந்து நிற்பதைத் தவிர வேறு வழியில்லாத நிலை. அதேபோல ஆயர் குலத்தைச் சேர்ந்த பெண்களாகிய நாங்களும், உனது குணநலன்களைப் போற்றிப் பாட வந்து உன் மாளிகை முன்பு காத்திருக்கிறோம். துயில் எழுந்து வந்து எங்களைக் காத்து அருள்வாயாக.
    Next Story
    ×