search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருப்பாவை
    X
    திருப்பாவை

    மார்கழி ஸ்பெஷல் தினமும் ஒரு திருப்பாவை பாடுவோம்: இன்று பாடல் - 2

    மார்கழி மாதம் முழுவதும் விரதம் இருந்து தினமும் ஒரு திருப்பாவையை பாடி இறைவனை வழிபாடு செய்து வந்தால் கன்னியரின் கல்யாண கனவு நிறைவேறும்.
    வையத்து வாழ்வீர்காள்! நாமும்நம் பாவைக்குச்
    செய்யுங் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
    பையத் துயின்ற பரமன் அடிபாடி
    நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
    மையிட்டு எழுதோம்! மலர் இட்டு நாம் முடியோம்
    செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்று ஒதோம்
    ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
    உய்யுமாறு எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.

    இந்த உலகில் வாழ்பவர்களே! நாம் நம்முடைய பாவை நோன்புக்காக மேற்கொள்ள வேண்டிய கடமைகளைக் கேளுங்கள். திருப்பாற்கடலிலே துயில்கின்ற பரந்தாமனின் திருவடிகளை துதிப்போம். நெய்யும், பாலும் அருந்த மாட்டோம். விடியற் காலையிலேயே குளிப்போம். கண்களுக்கு அழகு சேர்க்கும் மையிட்டுக் கொள்ள மாட்டோம். கூந்தலில் பூச்சூடிக் கொள்ள மாட்டோம். செய்யக்கூடாத செயல்களை செய்ய மாட்டோம். யாரிடமும் சென்று கோள் சொல்ல மாட்டோம். யோகியருக்கும், தவசியருக்கும் நாமாக சென்று தர்மம் செய்வதும், சன்யாசிகளுக்கும், பிரம்மச்சாரிகளுக்கும் அவர்கள் வீடு தேடி வரும் போது இயன்ற அளவு பிச்சையும் அளிப்போம். விருப்பத்துடன் இந்த செயல்களை செய்து கடைத்தேறும் வழியை நினைத்து மகிழ்வடைவோம்.
    Next Story
    ×