search icon
என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    சித்ரா தேவி
    X
    சித்ரா தேவி

    நிம்மதியைத் தரும் சித்ரா தேவி காயத்ரி மந்திரம்

    தனிப்பெரும் பரம்பொருளான நித்யா தேவியை வழிபாடு செய்தால், பெரும் செல்வம் வந்துசேரும். திடீர் அதிர்ஷ்டமும் வாய்க்கும். அவளுக்குரிய காயத்ரி மந்திரத்தை பார்க்கலாம்.
    திதி நித்யா தேவிகளில், பதினைந்தாம் நித்யா தேவியாக திகழ்பவள் சித்ரா. பளபளவென மின்னும் கதிர்களை வீசும் திருமேனி கொண்டவள். பல்வேறு ரத்தினங்கள் பதித்த மகுடத்தில் பிறைமதி சூடியவள். வெண் பட்டாடை உடுத்தி, பல் வகையான ஆபரணங்களை மேனி முழுவதும் அணிந்து அழகே வடிவாய்த் திகழ்கிறாள். பாசம், அங்குசம், அபயம், வரதம் தரித்த நான்கு திருக்கரங்கள் கொண்ட இவள், பக்தர்களின் பயத்தை போக்குபவள். என்றும் நிலையானவள். கனவிலும், நினைவிலும் அடியவர்கள் இதயத்தில் வீற்றிருப்பவள். உதிக்கின்ற சூரியனைப்போல் ஞான ஒளி வீசி அறியாமை இருளை விரட்டுபவள். அண்டங்கள் அனைத்திலும் மகிமை வெளிப்படத் திகழ்பவள். தனிப்பெரும் பரம்பொருளான இவளை வழிபாடு செய்தால், பெரும் செல்வம் வந்துசேரும். திடீர் அதிர்ஷ்டமும் வாய்க்கும்.

    வழிபட வேண்டிய திதிகள்:- பவுர்ணமி, தேய்பிறை பிரதமை.

    மந்திரம்:-

    ஓம் விசித்ராயை வித்மஹே

    மஹா நித்யாயை தீமஹி

    தன்னோ தேவி ப்ரசோதயாத்
    Next Story
    ×