search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வீட்டில் பூஜை
    X
    வீட்டில் பூஜை

    எந்த நோயையும் கட்டுப்படுத்தும் சர்வ ரோக நிவாரண மந்திரம்

    முழு மனதோடு இம்மந்திரத்தை நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஜபித்து வருவதன் மூலம் நோயை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி குணப்படுத்தவும் முடியும்.
    நாமத்ரய மந்திரமானது நாமத்ரய அஸ்த்ர மந்திரம் என்று அழைக்கப்படுகிறது. இம்மந்திரம் எல்லா வகையான நோய்களையும் அஸ்திரமாக நின்று அழிக்கவல்லது. மகா விஷ்ணுவின் மூன்று திவ்ய நாமங்களை கொண்டதே இந்த நாமத்ரய மந்திர அஸ்திரம்.

    நாமத்ரய மகா மந்திரம்:- ஓம் அச்சுதாய நம: ஓம் அனந்தாய நம: ஓம் கோவிந்தாய நம:

    சர்வ ரோக நிவாரண மந்திரம் என்றும் இதனை கூறுவர். எத்தகைய  கொடிய நோயாக இருப்பினும் அதனை இத்திவ்ய நாமத்தை ஜெபிப்பத்தின் மூலம் சரி செய்துவிட முடியும் என்று வியாச மகரிஷி கூறியுள்ளார்.  

    இம் மந்திரத்தை ஜபம் செய்ய தனிப்பட்ட உபதேசங்களோ தீக்ஷைகளோ தேவையில்லை. முழு மனதோடு இம்மந்திரத்தை நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஜபித்து வருவதன் மூலம் நோயை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி குணப்படுத்தவும் முடியும்.  இதனை சாதாரண ஜபமாகவோ அல்லது லிகித ஜபமாகவோ ( ஏட்டில் எழுதுவது) ஓர் நாளுக்கு குறைந்தபட்சமாக 108 முறை ஜபித்து வர வேண்டும்.

    Next Story
    ×