என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சுக்கிரன்
    X
    சுக்கிரன்

    வெள்ளிக்கிழமைகளில் சொல்ல வேண்டிய சுக்கிர பகவானுக்குரிய தமிழ் ஸ்லோகம்

    எந்த ஒரு நபரும் வாழ்வில் இன்பங்களை அனுபவிக்க அருள்புரிபவர் “சுக்கிர பகவான்” ஆவார். வெள்ளிக்கிழமைகளில் சொல்ல வேண்டிய அவருக்கு உகந்த ஸ்லோகத்தை அறிந்து கொள்ளலாம்.
    ஹிமகுந்த ம்ருணாளாபம்
    தைத்யானாம் பரமம் குரும்!
    ஸர்வாசாஸ்த்ர ப்ரவக்தாரம்
    பார்கவம் ப்ரணமாம் யஹம்!!

    தமிழாக்கம்

    சுக்கிர மூர்த்தி சுபமிக ஈவாய்
    வக்கிரமின்றி வரமிகத் தருள்வாய்
    வெள்ளிச் சுக்ர வித்தக வேந்தே
    அள்ளிக்கொடுப்பாய் அடியார்க்கு அருளே !

    தொண்டு: துணி அல்லது வெள்ளிக்கிழமை ஒரு பெண்ணிடம் வெண்ணெய்  அல்லது தயிர் நன்கொடை கொடுக்கவேண்டும்.
    நோன்பு நாள்: வெள்ளிக்கிழமை.
    பூஜை: தேவி பூஜை.
    ருத்ராட்சம்: 9 முக ருத்ராட்சம் அணியவேண்டும்.

    சுக்கிர காயத்ரி மந்திரம்

    அச்வ த்வஜாய வித்மஹே தநு: ஷஸ்தாய தீமஹி|
    தந்நோ சுக்ர: ப்ரசோதயாத்||
    Next Story
    ×