search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பெருமாள்
    X
    பெருமாள்

    சகல செல்வங்களும் கிட்ட வெங்கடேஸ்வரா தியான மந்திரம்

    பெருமாளுக்கு உகந்த இத்துதியை சனிக்கிழமைகளில் பாராயணம் செய்து வந்தால் சகல செல்வங்களும் கிட்டும். கடன் பிரச்சனை படிப்படியாக குறையும்.
    த்யாயேத் வெங்கடேஸம் கலிமலஹரணம், காஞ்சநாராதிங்ரிம்
    ஸேஷாத்ரெள ஸந்நிவிஷ்டம் சிரமபி ரமயா பூமி வைகுண்டநாதம்
    ஸுப்ரஹ்மண்யம், ஸுகேஸம், ஸகல முநிகணைஸ்ஸேவிதம் மந்த்ரமூர்த்திம்
    பக்தேஷ்டார்த்த ப்ரதாந ப்ரவித தயஸஸம் விஷ்ணுமர்ச்சாவதாரம்.

    - வெங்கடேஸ்வர த்யானம்

    பொதுப்பொருள்: கலி தோஷங்களைப் போக்குபவனே, சேஷாத்ரி மலையின் சிகரமான பூலோக வைகுண்டமாம் திருமலையில் வாசம் செய்பவனே, வேங்கடவனே, நமஸ்காரம். சுப்ரமண்யனைப் போல் மலைமேல் கோயில் கொண்டவனே, சுகங்களை வாரி வாரி பக்தர்களுக்கு அளிப்பவனே, முனிகணங்களால் சேவிக்கப்படும் மந்திரங்களை ஈர்த்துக்கொள்பவனே, நமஸ்காரம். பக்தர்களின் விருப்பங்களைப் பூர்த்தி செய்பவனே, கருணையே உருவானவனே விஷ்ணுவின் அர்ச்சாவதாரமான வேங்கடவனே நமஸ்காரம்.
    Next Story
    ×