என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வாராகி அம்மன்
    X
    வாராகி அம்மன்

    தன்னம்பிக்கையும், தைரியமும் தரும் வாராகி அம்மன் மூல மந்திரம்

    தினமும் நம் மனதில் அந்த வாராஹி அம்மனை நினைத்துக் கொண்டு இந்த மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் பயந்த சுபாவமானது மறைந்து, நம்மை அறியாமலேயே நம் மனதிற்குள் தன்னம்பிக்கையும், தைரியமும் வளர்ந்துவரும்.
    இக்கட்டான சூழ்நிலையில் நம் மனதில் இருக்கும் பயத்தினை நீக்குவதற்கான ஒரு சிறந்த வழிபாடு தான் இந்த வாராஹி வழிபாடு. இந்த மூல மந்திரத்தை உச்சரிக்கும் போது நம்மை அறியாமலேயே நம் மனதிலுள்ள பயமானது நீக்கப்படும். உங்களுக்கான வாராகி அம்மனின் மூல மந்திரம் இதோ.

    ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் க்லௌம் ஐம் ||
    நமோ பகவதி வார்த்தாளி வார்த்தாளி
    வாராஹி வாராஹி வாராஹமுகி வாராஹமுகி ||
    அந்தே அந்தினி நமஹ|
    ருந்தே ருந்தினி நமஹ|
    ஜம்பே ஜம்பினி நமஹ|
    மோஹே மோஹினி நமஹ|
    ஸ்தம்பே ஸ்தம்பினி நமஹ|
    சர்வ துஷ்டபிரதுஷ்ட்டானாம் சர்வேஷாம்
    சர்வ வாக்சித்த சக்ஷூர் முககதி
    ஜிஹ்வா ஸ்தம்பனம்
    குரு குரு சீக்ரம் வச்யம்,ஐம் க்லௌம்
    ட்டஹ ட்டஹ ட்டஹ ட்டஹ ஹூம் அஸ்த்ராய ப்பட் ||

    தினம் தோறும் நம் மனதில் அந்த வாராஹி அம்மனை நினைத்துக் கொண்டு இந்த மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் பயந்த சுபாவமானது மறைந்து, நம்மை அறியாமலேயே நம் மனதிற்குள் தன்னம்பிக்கையும், தைரியமும் வளர்ந்துவரும். அஷ்டமி திதியன்று நெய்தீபம் ஏற்றி வாராஹி அம்மனை வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று. வாராஹி அம்மனுக்கு மாதுளம்பழம் நைவேத்தியமாக படைப்பது மிகவும் சிறப்பு.
    Next Story
    ×